பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி சாமி என்பவரது மகள் மீரா ஜாஸ்மீன் என்பவர், வேலைக்கு இண்டர்வியூக்கு சென்ற நிலையில், சாமங்கலம் காப்புக் காட்டில் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் அந்தோணி சாமி – கலா தம்பதியினர், தங்கள் மகள் மீரா ஜாஸ்மீனின் உயர்கல்விக்காகத் தற்போது குடும்பத்துடன் திருச்சி மாநகர் சீனிவாச நகர் பகுதியில் வாடகைக்குக் குடியேறியுள்ளனர். மீரா ஜாஸ்மீன், திருச்சியில் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் UYEGP திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும் மானிய தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சத்தை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசாணை படி அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரை வங்கியில் கடன்பெற்று அதற்கு 25 […]
தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து பிரபல பிரிட்டிஷ் மருத்துவ இதழான ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, சுகாதாரத் துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் நேரடியாக வெயிலில் வேலை செய்வதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது. 2023 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், மாநில உறுப்பு மாற்று ஆணையச் செயலர் என். கோபாலகிருஷ்ணன் தலைமையிலான சென்னை […]
ரூ.21,650-க்கு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி (டேப்) வழங்கப்படும் […]
தமிழகத்தில் இன்று முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் […]
ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் வேலு (34) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 8 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், 6 வருடங்களுக்கு முன்பு தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, வேலுவின் மனைவி இளைய மகளுடன் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின் மூத்த மகள் தந்தையின் […]
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே கெட்டி செவியூரைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை மற்றும் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. காளான் சேகரிக்கவும், கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்கவும் அப்பகுதி மக்கள் இந்தக் தோட்டத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை, கும்மிபனையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஓபிஎஸ்.. உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் கரம் கோர்த்துள்ளார்.. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உடன் தொடர்பு வைக்கக் கூடாதென பொதுக்குழுவில் தீர்மானம் […]
ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசியதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.. இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. இபிஎஸ் எடுத்த முடிவுகளால் தான் அதிமுக 2019, 2021, 2024 தேர்தல்களில் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.. மேலும் துரோகத்திற்கான நோபல் பரிசு இபிஎஸ்க்கு தான் கொடுக்க வேண்டும் என்றும், […]

