செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, ஒரு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளன. இந்த முகாம் வரும் செப்.27ஆம் தேதியான சனிக்கிழமை அன்று, பையனூரில் உள்ள ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் […]

பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களுக்கு மாற்று வழிகளை கண்டறியும் முயற்சிகள் உலக அளவில் நடந்து வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக், தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் சமையல் அடுப்பை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இதற்கு அவர், ஹைட்ரஜன் ஆக்சிஜன் நோ கார்பன் கேஸ் என்று பெயரிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஹைட்ரஜன் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் […]

தற்காலிகமாக மாவட்ட மகமை மூலம் ஒரு பயிற்சி மேலாளர் மற்றும் ஒரு கணக்காளரை தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌ இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஏழை மகளிரை சுயஉதவிக் குழுக்கள் மூலம் வலுப்படுத்தி சமுதாய பொருளாதார மேம்பாடும், சுயசார்பு தன்மையும் அடையச் செய்து அவர்களை ஆற்றல்படுத்திடும் நோக்கில் […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில், கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பெசோ என்ற தனியார் காப்பகத்தில், 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த 61 வயது சாம் கணேஷ் என்பவரால் நடத்தப்பட்டு வரும் இந்த காப்பக வளாகத்திற்குள்ளேயே, ஃபிரிகேஜ் முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் 4ஆம் வகுப்பு […]

கடந்த 8 ஆண்டுகளாக சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியால் கட்டுமானத் துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வந்தது. அதன்படி, 28% ஆக இருந்த இந்த வரி, ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பின்படி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்தும் நிறைவேறாத இந்த வரிக்குறைப்பு, கால தாமதமாக வந்தாலும், கட்டுமானத் துறையினர் மற்றும் வீடு கட்டும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்த சிமெண்ட் விலை : ஜிஎஸ்டி […]