மத்திய அரசின் முக்கியத் திட்டமான பி.எம். கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 21-வது தவணை அக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு, விவசாயிகள் கட்டாயம் தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் (Unique Farmer ID) பெற்றிருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் தவெகவை காப்பாற்ற முடியாது.. அதிமுக – தவெக கூட்டணி சேர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.. எனவே தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுப்பவர் தான் சரியான தலைவர்.. சரியான முடிவை எடுக்காததால் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் எதிர்காலம் […]

சொத்து வைத்திருக்கும் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சொத்து தொடர்பான மிக முக்கியமான ஆவணமான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாதக்கணக்கில் அலைய வேண்டியதில்லை. இடைத்தரகர்களிடம் பணத்தை கரியாக்க வேண்டியதில்லை. மக்களின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பட்டா பெயர் மாற்றும் சேவையைத் தமிழக அரசு முழுவதுமாக ஆன்லைன்மயமாக்கி, செயல்முறையை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றியுள்ளது. முன்பு, […]

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள்வறுமை, தமிழ்த்தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-மும், மருத்துவப்படி ரூ.500/உம் என மொத்தம் […]

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று, கடந்த சில நாட்களாகக் கடுமையான சளிப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனால் கவலையடைந்த பெற்றோர், குழந்தையை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர் சளிக்கான சொட்டு மருந்து ஒன்றைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்தச் சொட்டு மருந்தைக் குழந்தைக்கு கொடுத்த சில நிமிடங்களிலேயே, குழந்தை திடீரென மயங்கி […]

தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்ட மக்களும் புத்தாடை அணிந்து, விதவிதமான பலகாரங்களுடன், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் சென்னையில், நேற்று இரவு வானம் முழுவதும் வெளிச்சம் நிறைந்திருக்க, பட்டாசுச் சத்தம் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் குவிந்த பட்டாசு கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை […]

தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. இந்த திட்டத்தின் கீழ் ரூ.40,000 வரை மானியம் வழங்கப்படும். […]