மழை காலத்தில் தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும் என மின்வாரியம் கூறியுள்ளது. மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில்; ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம், வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது, ஈரப்பதமான சுவர்களில் கை வைக்க கூடாது. […]

தீபாவளி முடிந்து மக்கள் ஊர் திரும்ப இருக்கும் நிலையில், சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் கொண்டாடவும், பின்னர் தாங்கள் பணி செய்யும் நகரங்களுக்கு திரும்புவதற்கும் ஏதுவாக தெற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களிலும் மொத்தம் 60 சிறப்பு ரயில்களை அறிவித்தது. அதன்படி மக்கள் சிறப்பு ரயில்களை பயன்படுத்தி தற்போது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும், […]

ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.வீட்டில் மின்சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது கவனத்துடன் இயக்க வேண்டும். வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் […]

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்.21ம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று […]

திரை நட்சத்திரங்கள், குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பண்டிகை தினங்களில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில், இன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் முன்பு இன்று காலை முதலே ரசிகர்கள் ஏராளமாகக் குவிந்தனர். ரசிகர்களின் நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு, காலை நேரத்தில் தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், வீட்டின் […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. கிராமப் பஞ்சாயத்து வாரியாக பெண்கள் அளித்த விண்ணப்பங்களில், தகுதியுள்ள பயனாளிகளை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் முடிவில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் ₹1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று […]

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவரும், அதிமுக நிர்வாகியுமான ஒருவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் விளம்பரப் பலகைகள் வைக்கும்போது, அதில் தனது படத்தை மிகப் பிரம்மாண்டமாக ஒரு ஓரத்தில் இடம்பெறச் செய்வது இவரது வழக்கம். இவரது இந்த விளம்பர உத்தியைப் பார்த்த திருச்செந்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இவரை அணுகி நிதி நிறுவன வளர்ச்சிக்காக தனியார் நிறுவனத்தில் பெரிய அளவில் கடன் […]

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ 5.01 கோடி மதிப்புள்ள சீன பட்டாசு கடத்தல் முறியடிக்கப்பட்டது. இச்சமயத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக சட்டவிரோதமாக பட்டாசு இறக்குமதி செய்வதை தடுக்கும் நோக்கத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ‘ஆபரேஷன் ஃபயர் டிரெயில்’ எனும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் நாற்பது அடி நீளமுள்ள இரண்டு கொள்கலன்களை மடக்கிப் பிடித்த அதிகாரிகள், இந்தக் கொள்கலன்களில் பொறியியல் பொருட்கள் என்ற போர்வையில், 83,520 […]

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவை தான் முதலில் நினைக்கு வரும். முந்தைய தலைமுறையினர் ஜிலேபி, லட்டு, முறுக்கு போன்ற இனிப்பு மற்றும் கார வகைகளை வீட்டிலேயே சுகாதாரமாகத் தயாரித்த காலம்போய், இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கடைகளையே நாடுகின்றனர். இந்நிலையில், பண்டிகை நாட்களை குறிவைத்து, தரமற்ற உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய ஆபத்தில் இருந்து நுகர்வோர் தங்களின் ஆரோக்கியத்தைத் தற்காத்துக் கொள்ள […]

திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் […]