இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அமீர்கான். இவர், தனது தனித்துவமான கதாபாத்திரங்களுக்காக பெயர் பெற்றவர். கமல்ஹாசனைப் போலவே, இவர் எப்போதும் புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவார். ‘லகான்’, ‘பிகே’ போன்ற பல படங்கள் அதன் தனித்துவத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ படத்தில் அமீர்கானை ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தார். ‘விக்ரம்’ படத்தில் நடிகர் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் அஜய் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவி நந்தினி (21) ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, நந்தினி வழக்கம் போல் நேற்று திருச்செங்கோடு கல்லூரியில் இருந்து நாமக்கல்லுக்கு வந்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி, அஜய் தனது உறவினர்களுடன் காரில் காத்துக் கொண்டிருந்தார். நந்தினி காரில் […]

‘இரிடியம் மோசடி’ தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, நெல்லை உட்பட 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து போலியான இரிடியம் ஆவணங்கள், லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி கும்பல், ‘இரிடியம் விற்பனை மூலம் […]

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை மீண்டும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வந்த அவர், திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “திமுக அரசு கேபிள் டிவி […]

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர […]

அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் &, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திறன் திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த […]

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நேற்று நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி […]

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரியும் நாகராஜ், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்றில், பேராசிரியர் நாகராஜ் அந்த மாணவியிடம், “எனக்கு மனைவியிடம் படுக்கை சுகம் கிடைக்கவில்லை.. அதை நீ கொடுப்பாயா? இல்லையென்றாலும் பரவாயில்லை, என்னுடன் ஆடையின்றி படுக்க […]

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி செப்டம்பர் 8 ஆம் தேதி Gen Z தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர், மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. பல அமைச்சர்களும் பதவியை […]