இந்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் ஜல் சக்தி அமைச்சகங்களால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஸ்வச் சர்வேக்ஷன் (Swachh Survekshan) என்ற தூய்மை ஆய்வு அறிக்கை, நகரங்கள் மற்றும் கிராமங்களின் சுகாதார நிலையை அளவிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஆய்வானது நகரங்களுக்கு இடையே தூய்மைக்கான போட்டியை உருவாக்கி, தூய்மையான இந்தியாவை நோக்கிய நகர்வை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை, பொது இடங்களின் தூய்மை மற்றும் […]

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கர்லப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் பத்திரப்பதிவு எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில், பழனி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து […]

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்றும் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள். டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்றும் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடக்கிறது. 2026-ம் ஆண்டு்க்கான போட்டித் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.‌ இதற்கான பாடத்திட்டங்களின்படி தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்த அம்பேத்கர் கல்வி மற்றும் […]

தமிழகத்தில் இன்று முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கார் வாடகைக்கு ஓட்டி வந்தவர் அலாவுதீன். இவர், ஓராண்டுக்கும் மேலாக காணாமல் போனதாக அவருடைய மனைவி சுமையா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அலாவுதீனை எங்கு தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அலாவுதீனின் தம்பி ஹாரிஸ், ஹக்கீம் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதால் கைது செய்யப்பட்டார். “நீ என்னுடைய அண்ணியுடன் தவறான […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவரின் கணவர் வகுப்பறைக்குள் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி, முன்னாள் மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்துப் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் முன்னாள் மாணவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு ஆணும் பெண்ணும் பள்ளி வகுப்பறைக்குள் சென்று கதவைப் பூட்டியதை கண்ட மாணவர்கள் […]

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 12 மாநிலங்களில் மேற்கொள்ளவிருக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (Special Intensive Revision – SIR) நடவடிக்கைக்கு, தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், புதிதாக அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க மாட்டோம் என அறிவித்திருப்பது அரசியலில் பரபரப்பை […]