பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, […]
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக் […]
மதுரையில் ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர் தர்மராஜ் என்பவரது 5-வது மகள் திவ்யா, எம்.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்தவர். மலேசியாவில் உயர்கல்வித் தொடரப் போவதாக தனது குடும்பத்தினரிடம் கூறி, அதற்கான அனைத்து ஆவணங்களையும் காட்டியதால், குடும்பத்தினருக்கோ அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ எந்த சந்தேகமும் வரவில்லை. படிப்புக்காக தேவையான 5 லட்சம் ரூபாய் உள்ளிட்ட செலவுகளையும் பெற்ற திவ்யா, கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் இருப்பதாகவே அவரது குடும்பத்தினர் உறுதியாக நம்பியிருந்தனர். இந்நிலையில், […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த 28 வயதான பாபுராஜ் (ஐடி மாணவர்) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஆகியோர் காதலித்து வந்தனர். இவர்களது காதல் கைகூடாத நிலையில், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், மணப்பெண் திடீரென தனது முன்னாள் காதலன் பாபுராஜை தொடர்பு […]
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தேங்காய் வியாபாரி ஒருவர், தனது 17 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வியாபாரிக்கு மனைவியும், பிளஸ்-2 படிக்கும் 17 வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமிக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. 18 […]
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தற்போது அதன் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இந்த சூழலில், வரவிருக்கும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தனது முழு வீரியத்தை காட்டி, மீண்டும் பல பகுதிகளில் நல்ல மழையைப் பதிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்துத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர் மாதம், தமிழகத்தில் பரவலாக […]
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் போன்ற இடங்களில் உணவுப் பொருட்களைத் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தள்ளுவண்டிகளில் உணவுப் […]
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்துப் புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் சரியாக இருக்கிறதா, நீக்கப்பட வேண்டிய பெயர்கள் உள்ளனவா மற்றும் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டுமா போன்ற விவரங்களை சரிபார்ப்பதே இந்தப் பணியின் நோக்கமாகும். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருத்தப் பணிகள், டிசம்பர் 4ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், சுமார் […]
சென்னை தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள இராமச்சந்திரா தெருவில் அமைந்திருக்கும் ‘மங்கள வில்லா’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும் கிரிதர் என்பவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால், கிரிதர் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தமிட்டவாறே […]

