மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது பங்கிற்கு தக் லைஃப் படத்தை வைத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அவர், “முதலில் இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று பெயர் […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மறைந்த நடிகர் ராஜேஷின் மரணம் குறித்து சோஷியல் மீடியாவில் பரவி வரும் வதந்திகளுக்கு, நடிகை வடிவுக்கரசி விளக்கம் கொடுத்துள்ளார். மறைந்த நடிகர் ராஜேஷூக்கு பழக்கமான சித்த டாக்டர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது, ராஜேஷிடம் பேசிவிட்டு தான் போவாரம். சம்பவத்தன்றும் அப்படித்தான் யதார்த்தமாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ராஜேஷுக்கு மூச்சுவிட சிரமப்படுவதை கவனித்துள்ளர். பின்னர், நாடி பிடித்து பார்த்துவிட்டு, பல்ஸ் குறைவது கண்டு, ஆம்புலன்ஸை வரசொல்லுமாறு ராஜேஷின் மகனிடம் கூறியிருக்கிறார். […]
நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ. வேல்முருகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் முஸ்தபா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அவரது ரசிகர் மன்றம் சார்பில், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் […]
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று, பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை கொடுத்தது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திய பிறகும், முழு ஊரடங்கு பிறக்கப்பட்டது. இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மக்கள் மனதில் தங்களுக்க்கான ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றனர். அந்த வகையில், நடிகர் கிருஷ்ணாவும் கற்றது களவு, கழுகு போன்ற படங்களில் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும், கிருஷ்ணாவின் கழுகு திரைப்படம் பலருடைய பாராட்டையும், விருதுகளை குவித்தது. இந்நிலையில் தான், கிருஷ்ணா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. […]
கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் களத்தையே பரபரப்பாக்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் புதிதாக களம் காணவுள்ள விஜய்யின் தவெகவும் மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளில் […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி 3 தவணை உதவியை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி, இதுவரை மொத்தம் 19 தவணை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 20-வது தவணை எப்போது வெளியிடப்படும்..? அதாவது, 20-வது தவணை நிதி ஜூன் […]
இன்றைக்கு பட்டா வாங்குவது என்பது பலருக்கும் சவாலான விஷயமாகவே உள்ளது. பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள பழக்கங்கள் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும் என்றும் காலதாமதம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. புதிதாக நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவு முடிந்த பின், விஏஓ, சர்வயேர், தாசில்தார் என ஒவ்வொருவரையும் […]
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவை எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் […]