தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார்.. அவர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார்.. இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.. அதன்பின்னர் ஆளுநரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தமிழில் வாசிப்பார்.. கூட்டம் முடிந்த உடன் அனைத்து உறுப்பினர்களிடமும் கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார்.. […]

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று முன் தினம் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.. மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021-22-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடியாக இருந்தது.. 2025-26-ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. […]

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது.. எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.. ஒரு வழியாக காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால் தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன.. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி […]

சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியது.. இபிஎஸ் அணி – எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டாக பிளவுபட்ட நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த இரு அணிகளும் மீண்டும் இணைந்தது.. இந்த சூழலில் மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ எஸ். ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா […]

தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தவெக அரசு வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கை.. தவெக அரசின் இயலாமையை மூடி மறைக்கும் யுக்தியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து தப்பிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற போது அன்றைய நிதியமைச்சர் […]

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. ஆனால் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் எம்.எல்.ஏக்கள் 5 பேர் அடுத்தடுத்து […]

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.. இதுகுறித்து பேசிய அவர் “ இப்போது இந்த இடைத்தேர்தல்கள் வரப்போகிறது.. இந்த இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம் இருக்கிறது.. இப்போது தானே உங்களை மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தனர்.. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.. டிடிவி தினகரன் கட்சியில் இருந்து குதிரை […]

கோயில் வளாகங்களில் உள்ள கடைகளில் பூஜை பொருட்களின் விலை பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.. இதுதொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் “ அனைத்து கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.. சுத்தமான தரமான பொருட்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும்.. பூஜை பொருட்களின் விலை […]

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.. எனினும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.. அக்கட்சி தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.. அவருடன் முதல் கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.. பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.. […]

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி […]