தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானங்களை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்றும், கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ.10 வசூலிப்பதைத் தடுக்கவுமே முன்பதிவு முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆன்லைனில் மதுபானங்களை நேரடியாக வாங்குவதற்குச் சாத்தியமில்லை; மாறாக, இணையவழியில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும். பொதுமக்கள் வழக்கம் […]

விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லை. இந்த ஜென்மத்திலேயே தேவையான நன்மைகளை செய்து முடிக்கலாம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதை தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை […]

தமிழக வெற்றிக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் உரிய காலக்கட்டத்தில் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக சார்பில் தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ரூ.4,000 உதவித்தொகை போன்ற பிரதான வாக்குறுதிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், “பெரும்பாலான வாக்குறுதிகளை நமது அரசு […]

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி அழைத்து சென்ற லாரி டிரைவரை, வேலூர் மாவட்ட காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டைப் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31) என்பவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், பிரகாஷ் […]

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்வது இயல்பான ஒன்றுதான் என்றும், திட்டங்களுக்கு எந்த தனிநபரின் பெயரையும் சூட்டாமல் பொதுவான பெயர்களை சூட்டுவதே தவெக அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசு புதிய பெயர்களில் பழைய திட்டங்களையே ‘ஸ்டிக்கர்’ ஒட்டிச் செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு […]

நீதிமன்ற அவமதிப்பு என்ற வார்த்தையை கேட்டாலே நடுக்கம் ஏற்படும் காலம் மலையேறி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வரும் டாக்டர் செந்தில்குமார் என்பவரை, திண்டுக்கல்லில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடிக்குத் துறை நிர்வாகம் கடந்த 2025 ஜூன் மாதம் பணியிட மாற்றம் செய்தது. அடுத்த நான்கு மாதங்களிலேயே அவரை மீண்டும் தூத்துக்குடிக்கு மாற்றியதை எதிர்த்து, அவர் உயர் […]

தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாதத்தில் பெய்த பரவலான மழை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்திருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் மழைப்பொழிவு கணிசமாக குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சராசரி மழைப்பொழிவு 254.9 மில்லிமீட்டராக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டில் வழக்கமான அளவில் 94 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த […]

தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசின் ஒரு ரூபாய் வருவாயில் எந்தெந்த துறைகளிலிருந்து எவ்வளவு பணம் கிடைக்கிறது மற்றும் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த விரிவான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயை கணக்கிடுகையில், அரசுக்கு கிடைக்கும் ஒரு ரூபாயில் அதிகபட்சமாக 43.3 சதவீதம் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலமாகவே பெறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, 33.1 சதவீதம் […]

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு, தமிழக அரசு சார்பில் மொத்தம் ரூ. 80 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் விஜய் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவெடுக்க வைக்கும் நோக்கில், தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உயர்தரப் […]

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மதுபானங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “சென்னையின் கொளத்தூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட 30 முக்கியப் பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் […]