கல்லூரி மாணவிக்கு பிறந்த ரகசிய குழந்தையை மருத்துவமனையில் தூக்கி வீச முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஊட்டியில் பி.எஸ்.சி. பட்ட படிப்பு படித்துள்ளார். இவர், அங்கு படித்து வந்தபோது, மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 3 ஆண்டுகளாக ஊட்டியில் சுற்றி வந்தனர். மேலும், ரகசிய திருமணமும் செய்து கொண்டு, இருவரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த […]

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் […]

தவறான கணக்கீடு செய்யும் கணக்கீட்டாளர் மீது துணை நிதி கட்டுபாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து துணை நிதி கட்டுபாட்டாளர்களுக்கு நிதி இயக்குநர் எழுதிய கடிதத்தில் ; துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் வட்டங்களில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை அந்தந்த தலைமை பிரிவு அலுவலங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும் அவ்வப்போது மின்கணக்கீட்டு பணியாளர்கள் தவறாக மின்கணக்கீடு செய்வதால் வாரியத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. துணை நிதி […]

சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உரிமையாளர்கள் பட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், ‘அ’ பதிவேட்டில் கிராம நத்தம், நத்தம், வீடு, வீட்டு […]

நுரையீரல் புற்றுநோய் என்பது உலகளவில் அதிக உயிரிழப்புக்கு காரணமான நோய்களில் ஒன்றாகும். பொதுவாக, புகைப்பிடிப்பவர்களுக்கே வரும் நோயாக கருதப்பட்டாலும், புகைப்பிடிக்காதவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் புற்றுநோய் என்றால் பெரும்பாலானவர்கள் உடனே நினைப்பது சிகரெட் புகைப்பதைத்தான். உலகளவில் புகைப்பிடித்தல் இந்த நோய்க்கான முக்கிய காரணமாக இருந்தாலும், புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே இந்த நோய் வரும் என்பது தவறான நம்பிக்கை. சிகரெட்டை தொட்டுக் கூட பார்க்காத பலரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து […]

சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன. அதேபோன்று, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில […]