உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளோருக்கு தமிழ்நாடு அரசு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) நடத்தும் 3 நாள் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII வளாகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில், அதிக பயன்பாட்டில் […]

சேலம் அருகே இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தையையும், இரண்டாவது மனைவியுமான சித்தியையும் தலையை துண்டித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடங்கணச்சாலை கோனேரிப்பட்டி பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (47), கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி ஜெயந்தி, சில ஆண்டுகளாக அவரை விட்டு பிரிந்து, சேலத்தில் தனியாக வசித்து வருகிறார். அவர்களுக்கு ஆகாஷ் (23) என்ற […]

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழியின் இலக்கிய திறன் மேம்படுவதற்காக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல்’ தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம், மாணவர்களின் இலக்கியப் பார்வை, வாசிப்பு நுண்ணறிவு, மொழிப்பண்பு ஆகியவை மேம்படும் வகையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் […]

சென்னை மாநகரப் பகுதிகளில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சமூட்டும் […]

தமிழகத்தில் 27-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான […]

கட்சி தொடங்கி உடன் ஆட்சிக்கு வர முடியாது, முதலில் உழைக்க வேண்டும் என மறைமுகமாக விஜய்க்கு இபிஎஸ் அறிவுரை கூறியுள்ளார்.. அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள்.. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே சிலர் பேசுகின்றனர்.. பாவம்.. அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர்.. இதுகூட தெரியாமல் ஒரு […]

தவெக மாநில மாநாட்டில் விஜய் சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றினார்.. அப்போது பாஜக, திமுகவை விமர்சித்த அவர் 2026 தேர்தலில் வரலாறு திரும்பும் என்று கூறினார்.. மேலும் பேசிய அவர் “ இந்த விஜய், உங்க விஜய் உங்கக் கூட உங்கள் கூட உண்மையாக பேச, உங்களுக்காக சேவை செய்ய நான் வர்ரேன்.. சொல் அல்ல.. செயல் தான் முக்கியம்.. நல்லது செய்யறதுக்கு மட்டும் தான் இந்த விஜய்.. ஒரு […]

தவெக மாநில மாநாட்டில் பேசிய விஜய் மீண்டும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ தவெக கையில் எடுத்திருப்பது உண்மையான அரசியல்.. உணர்வுப்பூர்வமான அரசியல், நாட்டு மக்களுக்கு நல்லதை செய்யும் அரசியல்.. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று இந்த மாநாட்டிற்கு பெயர் வைத்துள்ளோம்.. 1967, 1977 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசியல் மிகப்பெரிய ஆட்சி அதிகார மாற்றம் நடந்தது போல் 2026ல் அப்படி ஒரு வரலாறு […]

மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் பேசிய விஜய் “ ஒரு சிங்கம் எப்போதுமே தனித்துவமானது.. ஒருமுறை சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசைகளும் அதிரும்.. அந்த சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும்.. வேடிக்கை பார்க்க வெளியே வராது.. எவ்வளவு பசியாக இருந்தாலும் உயிரற்ற விலங்குகளை சிங்கம் எப்போதும் வேட்டையாடாது.. வேட்டையாடும் போது கூட தன்னை விட பெரிய மிருகங்களை மட்டும் […]