கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலத்தில் அக்கட்சிக்கு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அதிரடியாக ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மாதேஸ்வரன் (2011-2016), சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி முன்னிலையில் […]

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையிலேயே அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. குறிப்பாக, கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘விசில்’ சின்னத்தைக் கையாள்வது தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடையே ஏற்பட்ட […]

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது போதையில் 77 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெரிய பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (24) என்ற மேளக் கலைஞர் செய்த இந்த கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று மது போதையில் இருந்த அஜித்குமார், அப்பகுதியில் வசிக்கும் 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மது குடிப்பதற்குச் […]

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோலிவுட்டில் இருந்து கோட்டைக்கு குறிவைத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் அதிரடிப் பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக நிலவிய அரசியல் மௌனத்தை கலைத்த விஜய், சென்னையில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தனது தேர்தல் நிலைப்பாட்டை தெளிவாகப் பதிவு செய்துள்ளார். “யாரோ தரும் அழுத்தங்களுக்காக நாம் அடிபணியப் போவதில்லை” என […]

மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து நெல்லை நோக்கிப் பயணித்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, மதுரை கொட்டாம்பட்டி அடுத்துள்ள பள்ளப்பட்டி பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாகச் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பின்னால் அசுர வேகத்தில் வந்த மற்றொரு ஆம்னி பேருந்து, எதிர்பாராதவிதமாக நின்றிருந்த பேருந்தின் பின்புறம் பலமாக மோதியது. நொடிப் பொழுதில் நடந்த இந்த மோதலில், நின்றிருந்த பேருந்தின் […]

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பிரதான அணிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் தங்கள் எதிர்பார்ப்புகளைத் தலைமைக்குக் கடத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூடுதல் இடங்களைக் குறிவைத்து வரும் வேளையில், தற்போது அந்தப் பட்டியலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி […]

தமிழக அரசியலில் தேமுதிக, தற்போது “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தீவிர பிரச்சாரத்தின் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். திமுக அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 50 சதவீத பணிகள் திருப்திகரமாக இருந்தாலும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் […]

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம்.பி தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தர்மர் முறைப்படி அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் ஆதரவால் எம்.பி பதவி பெற்ற தர்மர் அவருடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.. ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவுக்கு சென்ற நிலையில் தர்மர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் தர்மர். […]

பெரம்பலூரில் போலீசார் முன்னிலையில் ரவுடி வெள்ளைக்காளை என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு […]