சென்னை பட்டினம்பாக்கத்தில் முதல்வர் விஜய்யின் இல்லத்திற்கு அருகாமையிலேயே புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருந்த முதலமைச்சரின் அலுவலக அறை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு அண்மையில் […]

நடிகர் தனுஷ், தனது ரசிகர் நற்பணி மன்றங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவது, அவர் விரைவில் அரசியலில் களமிறங்க ஆயத்தமாகிறாரா என்ற விவாதத்தை திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் கிளப்பியுள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்மூட்டி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பதுடன், சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து, […]

சட்டசபையில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் விமர்சனங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்தார். சட்டசபையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “திமுக ஆட்சியில் ‘ஆக்ஷன்’ மட்டுமே இருந்தது; ‘ஆக்டிங்’ இல்லை. தவெக ஆட்சியில் எதையும் ரீல்ஸ் கண்டெண்ட் போலப் பேசி வருகிறீர்கள்” என விமர்சித்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “இந்தத் தொழில்நுட்பத்தை 10 நிமிடங்களுக்கு முன்புதான் அண்ணன் எம்.ஆர்.கே. […]

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகக் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தற்போது நிலவும் நடைமுறைப்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் […]

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் கொண்ட திருக்கோவில்களுக்குப் பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தகுதியான நபர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் மாநில […]

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கான தனித்துவமான விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சுமார் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான இலக்கு இஸ்ரோவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோடியாக, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மனிதரில்லா சோதனை விண்கலம் நடப்பாண்டிற்குள் ஏவப்படவுள்ளதாகவும் […]

தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடையும் தருவாயில், இதுவரை அரசால் செயல்படுத்தப்பட்ட முக்கியச் சாதனைகள் மற்றும் முன்னோடித் திட்டங்கள் குறித்த துறைவாரியான அறிக்கையை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதவியேற்றது முதல் ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மற்றும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில், 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து […]

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல இணை ஆணையர்கள், துணை மற்றும் உதவி ஆணையர்கள், கோவில் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ➣ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அறநிலையத்துறை திருக்கோவில்களிலும் ஆகஸ்ட் 10 முதல் 14 வரை (5 […]

தமிழகத்தில் அனைத்து அரசு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டாயமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தனித்தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனோன்மணியம் சுந்தரனாரால் 1891ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘மனோன்மணியம்’ என்னும் புகழ்பெற்ற நாடக நூலில் இருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 1970-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம், அரசு […]

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், சுமார் 6 […]