துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. […]

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகே பொட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 21). அதேபோல், தும்பப்பட்டியைச் சேர்ந்தவர் ராகவி (29). இவரது கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சதீஸ்குமாருக்கும் ராகவிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. காதலில் மூழ்கிப்போன இருவரும், அந்த […]

சென்னையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. இதனால் ஒரு சவரன் ரூ.74,200 விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய […]

திருவள்ளூரில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வரும் நிலையில், அங்கு மாமூல் கேட்டு அடாவடி செய்த விடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (வயது 45), திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலராக உள்ளார். இவர், கடம்பத்துார் ஒன்றியத்தில் இயங்கி வரும் ‘கவுண்டர் மெசர்ஸ் டெக்னாலஜி’ என்ற துப்பாக்கி உபகரணங்கள் இணைக்கும் […]

சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சீமாத்தம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருவிழா ஆடி மாதம் தொடங்கி, தற்போதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், கோயிலுக்கு சமீபத்தில் ஒரு எருமை கன்றுக்குட்டி […]

விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் […]