2021 சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுப்படி, 2023 செப்டம்பர் 15ஆம் தேதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை திமுக அரசு தொடங்கியது. அதன்படி, மாதந்தோறும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 1.14 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக நாளை (ஜூன் 4) மாபெரும் முகாம் தமிழ்நாட்டில் நடக்கிறது. மொத்தம் […]

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் […]

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.06.2025 முதல் 11.06.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. இப்போது அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க, சரியான பயிற்சி தேவை, […]

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இன்று வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த (2025-26) கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1.85 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி, ஆன்லைன் பதிவை […]

தொழில் பார்ட்னர் சூனியம் வைத்திருப்பதாக கூறி 76 கிராம் தங்கம் நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை மந்தைவெளி ஸ்ரீ வேங்கடட்ம டிரஸ்ட் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் (56). தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். சில நாட்களாக தொழில் சரியாக கைகொடுக்கவில்லை என தனது நண்பரிடம் கூறி வந்துள்ளார். அப்போது அவர், பெரம்பூர் பெரியார் நகரில் […]

தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை அருகே மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஜவாஹிர் என்பவரது மகன் முகமது ஷாம் (வயது 31). இவர், பட்டபடிப்புக்காக கடந்தாண்டு சென்னை சென்றார். அப்போது, அமைந்தக்கரை ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவரின் மகள் ரிஸ்வானா (21) என்பவருடன் முகமது ஷாமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர், இருவரும் காதலித்து வதனர். காதலித்தபோது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். […]

80 மற்றும் 90-களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜசேகர். இவர், நடிகர் மட்டுமின்றி திரைப்பட இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நிலையில், தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். இவருக்கு, சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் இவருடைய கடைசியாக ஆசையாக இருந்தது. ராஜசேகர் இறப்பதற்கு சில […]

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தக் லைஃப்”. இப்படத்திற்கு ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்படத்தில் வரும் “முத்த மழை” என்ற பாடலை தமிழில் “தீ” பாடியுள்ளார். ஆனால், “தக் லைஃப்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடகி தீயால் பெர்ஃபார்மன்ஸ் செய்ய முடியாததால், அவருக்கு […]

அதிமுக மூத்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவில் முதலமைச்சராக்கப்பட்ட பழனிசாமி, சசிகலா சிறைக்கு சென்றதும் அவரையும் கட்சியின் துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் உள்ளிட்ட அவர் குடும்பத்தினரையும் கட்சியை விட்டே ஒதுக்கினார். பின்னர், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், மூத்த நிர்வாகிகளான வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ்பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரையும் கட்சியை விட்டு பொதுக்குழு மூலம் நீக்கி, […]