காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து நிதி வழங்கப்படும். இந்த பள்ளிகள் மாணவர்களை அதிக அளவில் சேர்த்திருக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்ததுடன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சிறப்பாக இருக்க வேண்டும். கலை, […]

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 […]

வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில், தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள், தங்களை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக புகார் கூறியதால், காப்பக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்காப்பகத்திற்கு சமீபத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் திடீர் ஆய்வுக்கு வந்தனர்.சிறுமிகளிடம் தனியாகச் சந்தித்து பேசிய போது, அவர்கள் […]

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நேற்று மாலை, வடக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக,மேற்கு வங்கம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வங்கதேச பகுதிகளில்‌ நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில்‌ மேற்கு வங்க பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்‌. […]

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம், நகரங்களில் 43 சேவைகளும், கிராமங்களில் 46 சேவைகளும் 13-15 அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படுகின்றன. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அதிகபட்சமாக 45 நாள்களில் தீர்வு காணப்படும். உரிய ஆவணங்களுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.73,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]