திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்ததில் 42 வீடுகள் தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் கல்லூரி சாலை எம்.ஜி.ஆர் நகரில் சாயா தேவி என்பவரது இடத்தில் 42 தகரக் கொட்டைகள் அமைத்து தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்தால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. வட மாநில […]

தமிழக வெற்றிக் கழகம் என்றஅரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தவெக தலைமையில் கூட்டணி அமைக்க ஏற்றுக்கொண்ட கட்சிகளுடன் மட்டும் கூட்டணி வைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் […]

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கோவையில் மக்களிடையே உரையாற்றிய அவர் “ அறநிலையத்துறையின் நிதியை எடுத்து கல்லூரியை கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. அந்த பணம் இவர்களை உறுத்துகிறது.. கோயில் கட்டுவதற்காக உண்டியலில் பணம் போடுகிறீர்கள்.. அது அறநிலையத் […]

சென்னை எழும்பூர் காவல் ஆனையர் அலுவலகம் அருகே சரக்கு வாகனம் மோதி ஸ்கூட்டரில் வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் புதுப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்பவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணை மோதிய சரக்கு வாகனம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்று சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்காமல் விசாரணை கைதிகள் சிறையில் இருப்பது இங்கு தான் நடக்கிறது.. சிறை என்றால் சிறை காவலர்கள் கைதிகளை பாதுகாக்க வேண்டும்.. வழக்கு இருக்கு நீதிமன்றம் உள்ளது.. நாங்கள் குற்றவாளியா, நிரபராதியா என்பதை […]

மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது “ உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போது எனக்கு எனர்ஜி வந்துவிடுகிறது. மாணவர்கள் அதிகமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் உடனே ஓ.கே சொல்லிவிடுவேன்.. இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது இது முதன்முறை அல்ல.. […]

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையான பராமரிபின்றி இயங்கி வந்த காற்றாஅலை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக் கூடிய சாலையில் சீல நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவத்தின் காற்றாலை இயந்திரம் ஒன்று உள்ளது. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த காற்றாலை இயந்திரம் இன்று காலை காற்றின் வேகம் காரணமாக அடியோடு சாய்ந்தது. காற்றாலை உடைந்து 6 துண்டுகளாக சிதறியதால் அருகே […]

நெல்லையிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறினர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து இருந்து காலை 6:05 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. […]