இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தில் (PDS) மத்திய அரசு முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், வரும் அக்.15-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளன. மானிய ஒதுக்கீடு அதிகரிப்பு : வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் மானியம் பெற்ற உணவுப் பொருட்களின் மாதாந்திர ஒதுக்கீட்டை அரசு உயர்த்த […]

சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மோட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (36). எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்த இவருக்கு மாராயி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிவகுமாரின் மனைவி, ஏற்காடு மருதயாங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தோஷ் என்பவருடன் சுமார் இரண்டரை ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் சிவகுமாருக்குத் தெரியவர, கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் காவல் நிலையம் வரை […]

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் தற்போது வரை 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்னும் முடிவடையவில்லை. இத்திட்டத்தின் கீழ் விடுபட்டவர்கள் அல்லது புதிதாக தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிப்பதற்காக வரும் நவம்பர் மாதம் வரை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த […]

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், செந்தில்வேல் என்பவரை காதலித்துத் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, மகேஸ்வரி இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால், குழந்தைகளையும் கணவனையும் புறக்கணித்து ஆடம்பரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், செந்தில்வேல் வழிப்பறி வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றதும், திருநங்கைகளுடன் நெருங்கிப் பழகியதும் தெரியவந்துள்ளது. செந்தில்வேலுக்கு ஜாமீன் பெற, மகேஸ்வரியின் […]

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் […]