கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் களத்தையே பரபரப்பாக்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் புதிதாக களம் காணவுள்ள விஜய்யின் தவெகவும் மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளில் […]

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி 3 தவணை உதவியை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி, இதுவரை மொத்தம் 19 தவணை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 20-வது தவணை எப்போது வெளியிடப்படும்..? அதாவது, 20-வது தவணை நிதி ஜூன் […]

இன்றைக்கு பட்டா வாங்குவது என்பது பலருக்கும் சவாலான விஷயமாகவே உள்ளது. பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள பழக்கங்கள் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும் என்றும் காலதாமதம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. புதிதாக நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவு முடிந்த பின், விஏஓ, சர்வயேர், தாசில்தார் என ஒவ்வொருவரையும் […]

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவை எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் […]

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளங்கலை, முதுகலை, பட்டயம் சான்றிதழ் மற்றும் முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை கணினி பயன்பாடுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், http://online.ideunom.ac.in என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளங்கலை, […]

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சூரிய சக்தி நிறுவல் பயிற்சி வரும் 18.06.2025 முதல் 20.06.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சூரிய சக்தி துறையில் தொழில்முனைவோரின் அடிப்படைகள், சூரிய சக்தி துறையில் தொழில்முனைவோரின் அடிப்படைகள், சூரிய சக்தி மென்பொருள் கண்ணோட்டம், […]

தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், வரும் 7 முதல் 9-ம் தேதி […]

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-23 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2026-27 கல்வியாண்டு […]

கிராம உதவியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, மதிப்பெண்கள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழக வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித் தகுதியில், எஸ்எஸ்எல்சியில் தமிழ் […]