தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் இந்த விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டுகளில் ஜூன் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அதேபோல், இந்தாண்டும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென கடந்த வாரம் வரை கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஒருவாரமாகவே தமிழ்நாட்டின் […]

”பாமகவின் பொருளாளராக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என திலகபாமா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்மையில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் ராமதாஸ். மேலும், செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் […]

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சூழலில், அண்மையில் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், செயல் தலைவராக அன்புமணி […]

திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சற்றுமுன் ராமதாஸ் அறிவித்த நிலையில், திலகபாமாவே பொருளாளராக நீடிப்பார் என அன்புமணி அறிவித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார. இதனால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அன்புமணி ராமதாஸ் கட்சியின் மாவட்ட […]

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு சையது மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி மீது அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வைத்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் கட்சிக்குள் குழப்பம் வெடித்துள்ளது. ராமதாஸுக்கு ஆதரவாக ஒருதரப்பும் அன்புமணிக்கு ஆதரவாக மறுதரப்பும் ஆதரவுக் கரம் நீட்டி வரும் நிலையில் உட்கட்சிப் பூசல் மேலும் வலுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே […]

தமிழ் சினிமாவில் இயக்குனராக கொடிக்கட்டி பறப்பவர் செல்வராகன். இவர், ’காதல் கொண்டேன்’ படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். பிறகு, 2011ஆம் ஆண்டில் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார், ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். செல்வராகவனின் சகோதரர் தான் […]

தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்பது தொடர்பாக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் என மொத்தமாக 31,129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தனியார் பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டர் பயணிப்பதற்கான கட்டணத்தை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி தான், தனியார் பேருந்துகளில் கட்டணம் அதன்படி பேருந்துகளில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அரசுப் பேருந்துகளுக்கான […]

தந்தை ராமதாஸின் உயிருக்கு மகன் அன்புமணியால் ஆபத்து இருப்பதாக மறைந்த காடுவெட்டி குருவின் உறவினரான வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மயிலாடுதுறையில் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனருமான மணிகண்டன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “காடுவெட்டி குருவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அவர் ராமதாஸிடம் சென்றார். அப்போது, தனக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், வெளிநாட்டு […]

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தாண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. மாமலப்புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த விழா நடைபெறுகிறது. மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர கம்மல் பரிசாகவும், மாணவருக்கு வைர மோதிரமும் தவெக தலைவர் விஜய் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, 2, 3ஆம் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு […]

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்க உள்ளார். இதன் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 88 தொகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள். இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த […]