நாங்க யாருடன் வேணும்னாலும் கூட்டணி வைப்போம் என்றும் ஸ்டாலின் ஏன் நடுங்குகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இப்போதே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த […]

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார்.. தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, Bye, bye சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர். சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் […]

எங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.. கூட்டணியில் நான் எடுப்பது தான் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சிதம்பரத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.” என்று தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமையும் […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும் உள்ள நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவர் மாரிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கூலி வேலைக்கு சென்று அருள்ஜோதி மகள்களை காப்பாற்றி வந்துள்ளார். மகன் உயிரிழந்ததை பயன்படுத்திக் கொண்ட மாமனார் சேட்டு (65) மருமகளுக்கு பல வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தமது பெற்றோரிடம் சொல்லி அழுத […]