தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், அதிமுக-வின் கோட்டையாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வழக்கமாக அதிமுக-வுக்கு வலுசேர்க்கும் கொங்கு மண்டலத்தில் ஏற்படக்கூடிய சிறு சரிவுகளை, டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் வாக்குகளை கொண்டு ஈடுகட்டலாம் என்பதே எடப்பாடியின் கணக்காக இருந்தது. ஆனால், தற்போது அந்த மண்டலத்திலேயே மூத்த நிர்வாகிகளுக்கு இடையே வெடித்துள்ள அதிகாரப் போட்டி, […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய வழக்கு ஒன்றில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படும் இந்தப் புகாரில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ தான் […]
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அரசியல் களத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வரும் இத்திட்டம், சமீபத்திய இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குப் பிறகு சுமார் 1 கோடியே 30 லட்சம் பயனாளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, பெண்களின் வாக்குகளை […]
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கு நன்றி செலுத்தும் மகத்தான திருநாளாக ஆண்டுதோறும் தை முதல் நாள் உற்சாகமாகவும் கோலாகலமாகௌம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15-ம் தேதியான இன்று கொண்டாப்படுகிறது.. இது, விவசாயம், சூரிய வழிபாடு மற்றும் குடும்ப ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் தனித்துவமான பண்டிகையாக உள்ளது. பொங்கல் முக்கியத்துவம் பொங்கல் என்பது “பொங்கிப் பெருகுதல்” என்ற அர்த்தம் கொண்டது. புது அரிசி, […]
சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றியபோது, வட மாநிலங்களில் உள்ள பெண்களின் நிலையை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு திமுக எம்.பி. தயாநிதி மாறன் செவ்வாய்க்கிழமை அன்று கருத்து தெரிவித்திருந்தார். இது ஒரு அரசியல் மற்றும் சமூக விவாதத்தைத் தூண்டியுள்ளது. அந்த நிகழ்வில் பேசிய மாறன், பல வட மாநிலங்களில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைத் தொடர்வதற்கு பெரும்பாலும் ஊக்கப்படுத்தப்படுவதில்லை என்றும், மாறாக அவர்கள் வீட்டிலேயே […]
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. கல்வித்துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடை நிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும். தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையேஉள்ள தெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த […]
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சாலா (33) எனும் இரு குழந்தைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பிள்ளையை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவருக்கும் சாலாவுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் […]
தமிழக பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (MNS) தலைவர் ராஜ் தாக்கரே வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அண்ணாமலை மும்பையில் கால் வைத்தால் அவரது கால்களை வெட்டுவேன்” என ராஜ் தாக்கரே பேசியிருப்பது அநாகரிகமான அரசியல் மட்டுமின்றி, ஜனநாயக விழுமியங்களுக்கே எதிரானது என சீமான் தனது அறிக்கையில் சாடியுள்ளார். மகாராஷ்டிர மண்ணின் […]

