திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஒன்னுபுரம் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் (24 ). இவர், காவல்துறை பணியில் சேருவதற்காக வேலூர் மைதானத்தில் உடற்பயிற்சி செய்ய தினந்தோறும் சென்று வந்துள்ளார். அப்போது அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த துர்கா (21) இவரும் காவல்துறை பணியில் சேர்வதற்காக வேலூர் மைதானத்தில் பயிற்சிக்காக வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பேசி வந்த இவர்களுக்கு நடுவே, காதலும் மலர்ந்துள்ளது. […]

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருபவர் சந்திர பாண்டியன். இவரை மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் சிலரால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு விளைவாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. காவல்துறையினர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் […]

சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் தன்னுடைய whatsappல் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்தார். அதில் பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை என்ற தலைப்புடன் வாசகங்கள் இருந்தனர் மேலும் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் லாவண்யா சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு, ஓய்வு பெற்ற டிஜிபியிடம் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சேலம் […]

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் 5 வருடம் முடிவடைந்தவர்கள். முறையாக பள்ளியில் 9ம் வகுப்பு படித்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் எல்லோரும் தகுதி […]

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. முத்துசாமி மது விற்பனை தொடர்பாக பல்வேறு புதிய முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, 90 மிலி டெட்ரோ பேக்குகளில் மது விற்பனை செய்வது தொடர்பான ஆய்வும் நடைபெற்று வருகிறது. அதேபோல், கட்டிட தொழிலாளிகளின் வசதிக்காக காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடையை […]

பிரதமர் நரேந்திரமோடியை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சென்ற மாதம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியது. அதே போன்ற ஒரு கூட்டம் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உட்பட 24 முக்கிய […]

வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநாடு அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான முக்கிய ஆலோசனை நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்த மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி பெறுவதற்காக இன்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் நேரில் நேரில் சென்று […]