ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்‌ திட்டம்‌ / சிறப்பு பொது விநியோகத்‌திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம்‌ செய்யப்படும்‌ […]

ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து தொடக்கக் கல்வித் துறை, மாநகராட்சி, […]

தருமபுரி மாவட்ட முன்னாள்‌ படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட முப்படையில்‌ பணிபுரிந்து வெளிவந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ சார்ந்தோருக்கான சிறப்பு சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ வருகின்ற 24.07.2023 அன்று மாலை 04.00 மணியளவில்‌ தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தை […]

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பி உள்ள கடிதத்தில்‌, “பன்னாட்டுடயாபெடிஸ்‌ அமைப்பின்‌ அறிக்கையில்‌, உலக அளவில்‌ இந்தியாவில்‌ அதிக அளவு குழந்தைகள்‌ மற்றும்‌ வளர்‌ இளம்‌பருவத்தினர்‌ வகை-1 நீரிழிவு குறைபாட்டினால்‌ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குழந்தைகள்‌ தங்கள்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ ஒவ்வொரு நாளும்‌ இன்சுலின்‌ மருத்தினை ஊசி வழியே செலுத்துதல்‌, நாள்தோறும்‌ ரத்த சர்க்கரை அளவைக்‌ கண்காணித்தல்‌ உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக இளம்பெண் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில், கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கணவர் மற்றும் […]

அசாம் மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயது ஜாகீர் உசேன். இவரது மனைவி 28 வயது கைரொன்னிஷா. இவர்களின் மகன் 7 வயது கைரல் இஸ்லாம். இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்தனர். பின்னர் ஜாகீர் உசேனும், அவரது மனைவியும் சூலூர் அருகே சின்ன கலங்கலில் உள்ள நூற்பாலையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு […]

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை. இவருக்கு 80 வயது ஆகிறது. இவர் தனது மூத்த மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக மகள் சென்றிருந்த நிலையில், மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை கஞ்சா போதையில் இருந்த எதிர் வீட்டை சேர்ந்த குகன் (21) நோட்டமிட்டுள்ளார். […]

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கபாலி மகன் கார்த்திக் (21). இவர், மறைமலைநகர் பகுதியில் உள்ள பேட்டரி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (22) என்பவர் பணிபுரிந்து வந்தார். லோகேஷ், கார்த்திக்கின் உறவினர் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி நாளடைவில் அது ஓரினச்சேர்க்கை வரை சென்றுள்ளது. கடந்த சில […]

ஐஐடி மெட்ராஸ், கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பற்றிய ஆன்லைன் படிப்பைத் தொடங்கியுள்ளது.தனித்துவமான இப்பாடத் திட்டத்தின் வாயிலாக இரு முக்கிய பகுதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. நவீன மற்றும் நீடித்த கட்டுமானத் தொழில்நுட்பங்களில் ஈடுபடுவோருக்கு பயிற்றுவிப்பது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு அவசியமாகிறது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாளாகும். வடிவமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்கள் மட்டுமின்றி, பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள் ஆகியோரையும் […]