முதல்வர் விஜயின் சிறப்பு பணி அதிகாரியாக ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ரதன் பண்டிட் தற்போது சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். முதல்வரின் அரசியல் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதாகவும் இந்த ஆணை இன்று முதல் அமலுக்கு வருகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. எனினும் ஆஸ்தான ஜோதிடரை எப்படி அரசுப் பதவியில் நியமிக்கலாம் என்று […]

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்க வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேரும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 பேரும், நடுநிலை வகிப்பதாக 5 பேரும் தெரிவித்தனர்.. இதனால் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.. தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் விஜய் ” முதலில் நம்பிக்கை தீர்மானத்தை, மக்களுக்கான இந்த ஆட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்த […]

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக பெறாததால் அக்கட்சி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.. பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவோடு மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.. தமிழ்நாட்டின் முதல்வர் சி. […]

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 4 கோடியே 93 லட்சம் பேர் வாக்களித்தனர்.. தற்போதைய ஆளுஅங்கட்சிக்கு 1 கோடியே 72 லட்சம் பேர் தான் வாக்களித்தனர்.. மீதம் இருக்கும் சுமார் 3 கோடி 71 லட்சம் பேரும் தவெகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. சுமார் 65 சதவீதம் பேர் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது.. […]

இன்று சட்டப்பேரவை தொடங்கியதும், முதல்வர் விஜய் தனது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது..தவெக அரசுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.. குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக சிபிஎம், விசிக, காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்தன.. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.. அப்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசிய போது ” இளைஞர்கள் உங்கள் […]