ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் பாதையை முற்றிலும் மாற்றிக்கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு தனி அணியாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் மற்றும் அவரது தீவிர ஆதரவாளரான உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் […]
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக தங்களது கோரிக்கைகளுக்காக போராடி வந்த சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு இனிப்பான செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பணி நிறைவு கால பலன்களை அதிரடியாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுவரை சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய […]
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காலம் நிறைவடைந்த பின்னரும், வளிமண்டல சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் இந்த திடீர் வானிலை மாற்றம் குறித்துச் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்றைய தினம் (பிப்ரவரி 27) தென் […]
அதிமுக கூட்டணிக்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது ஆதரவை உறுதி அளித்துள்ளதாக தீயாய் பரவிய செய்திகளுக்கு, அந்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தற்போது அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் நேற்று நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, வணிகர்கள் இந்த முறை இரட்டை இலைக்கே ஆதரவு எனப் பரவலான பேச்சு எழுந்தது. இந்நிலையில், அந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து விக்கிரமராஜா விரிவான விளக்கமளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடனான […]
ஈரோடு மாவட்டம் வாய்க்கால்மேடு பகுதியில் இரண்டு திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில் தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்த நர்மதா (33) என்ற பெண், ஒரு திருநம்பியால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் மினி பேருந்தில் பயணித்தபோது, நர்மதாவிற்கும் 17 வயது திருநம்பி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த அறிமுகம் பேச்சாக தொடர்ந்து, அன்றைய இரவைத் தனிமையில் கழிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, […]
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரங்கேறும் மகாமக பெருவிழாவிற்கு எந்த அளவிற்குப் புகழுண்டோ, அதே அளவிற்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசிமக திருவிழாவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான மாசிமக விழா கும்பகோணத்தில் களைகட்டியுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காகத் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் மார்ச் 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் […]
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தல் பரீட்சையை சந்திக்க தயாராகி வரும் வேளையில், வேட்பாளர் தேர்வு தொடர்பான அதிரடி தகவல்கள் கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளன. தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் ஆர்வம் காட்டி விருப்ப மனுக்களை குவித்துள்ள நிலையில், எவ்வித நேர்காணலும் இன்றி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட தலைமை முடிவெடுத்துள்ளதாக கசிந்துள்ள செய்தி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சித் […]
தமிழக சாலைகள் மரண குழிகளாக மாறி வருகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த 2025-ஆம் ஆண்டிற்கான விபத்து புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளன. ஓராண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 21,122 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசுப் பேருந்துகளே அதிகளவில் விபத்துகளில் சிக்கியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புள்ளி விவரங்களின்படி, தமிழக அரசுப் பேருந்துகள் மட்டும் கடந்த ஆண்டில் 1,444 விபத்துகளில் […]

