கோவை மாவட்டத்தில் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 28 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாத நிலையில், கோவையில் மழை பெய்தாலும், வைரஸ் […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட குறைத்திருக்கும் முகம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 08.07.2023 அன்று காலை 10.00 மணிக்கு, சிறுவாக்கம்‌, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ ஆனம்பாக்கம்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ உள்ளாவூர்‌, ‘திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ போந்தூர்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ சிக்கராயபுரம்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்து வரும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, […]

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 14.07.2023 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்:சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 14.07.2023 அன்று பகல்‌ 10.30 மணிக்கும்‌, அதனை தொடர்ந்து முன்னாள்‌ படைவீரர்களுக்கான தொழில்‌ முனைவோர்‌ கருத்தரங்குமாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மக்கள்‌ […]

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் அறிவித்துள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (06.07.2023) ஒருநாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்று படுகையிலும், விளாங்காடு பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கீழடி, துலுக்கர்பட்டி உட்பட தமிழகத்தில் எட்டு இடங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதல்வர் […]

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது. சட்டவிரோதமானது என்று தெரிவித்து […]

தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வரும் 8ம் தேதி வரையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று கோவை, நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2️ நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதிலும் […]

தமிழகத்தில் தொடரும் அவலமாக பரோட்டா சாப்பிட்ட 38 பேர் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில், ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் பலியான நிலையில், அடுத்தடுத்து தமிழகத்திலும் உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சி சாப்பிட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. வேலூரில் சிக்கன் பிரியாணி, ஷவர்மா சாப்பிட்டு பலியானார்கள். ஆரணியில் சிக்கின் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தால். பல இடங்களில் பிரியாணியில் எலி தலை, கரப்பான்பூச்சி, புழு என்று வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி […]

பொதுவாக பொதுமக்களிடமிருந்து ஏதாவது ஒரு பொருள் காணாமல் போனால் அதனை காவல்துறையினருக்கு தெரிவித்தால் அந்த பொருளை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தையே 2 கில்லாடி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதாவது மதுரை கரிமேடு குற்றப்பிரிவில் பணியாற்றுபவர் பாலமுருகன் (40) இவருக்கு ரோந்து பணிக்காக மாநகர காவல் துறை சார்பாக ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. […]

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்துள்ள சுகுணாபுரம் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே காம்பவுண்ட் சுவர் ஒன்று உள்ளது. கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த சுவர் 30 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது. இதன் அருகில் புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் […]