தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் அறிவித்துள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று (06.07.2023) ஒருநாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்சியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பியாற்று படுகையிலும், விளாங்காடு பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கீழடி, துலுக்கர்பட்டி உட்பட தமிழகத்தில் எட்டு இடங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி தமிழக முதல்வர் […]

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது. சட்டவிரோதமானது என்று தெரிவித்து […]

தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வரும் 8ம் தேதி வரையில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று கோவை, நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2️ நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதிலும் […]

தமிழகத்தில் தொடரும் அவலமாக பரோட்டா சாப்பிட்ட 38 பேர் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில், ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் பலியான நிலையில், அடுத்தடுத்து தமிழகத்திலும் உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சி சாப்பிட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. வேலூரில் சிக்கன் பிரியாணி, ஷவர்மா சாப்பிட்டு பலியானார்கள். ஆரணியில் சிக்கின் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தால். பல இடங்களில் பிரியாணியில் எலி தலை, கரப்பான்பூச்சி, புழு என்று வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி […]

பொதுவாக பொதுமக்களிடமிருந்து ஏதாவது ஒரு பொருள் காணாமல் போனால் அதனை காவல்துறையினருக்கு தெரிவித்தால் அந்த பொருளை காவல் துறையினர் கண்டுபிடித்து தருவார்கள். ஆனால் இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தையே 2 கில்லாடி திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.அதாவது மதுரை கரிமேடு குற்றப்பிரிவில் பணியாற்றுபவர் பாலமுருகன் (40) இவருக்கு ரோந்து பணிக்காக மாநகர காவல் துறை சார்பாக ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. […]

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்துள்ள சுகுணாபுரம் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே காம்பவுண்ட் சுவர் ஒன்று உள்ளது. கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த சுவர் 30 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது. இதன் அருகில் புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(37) இவர் கடந்த 2016ஆம் வருடம் மே மாதம் 8ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது ஈஞ்சார் சாலையில் இவர் பயணித்துக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து 1 3/4 பவுன் தங்கச் செயின், செல்போன், 130 ரூபாய் பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தது. இது தொடர்பாக […]

திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் அன்பகம் என்ற பெயரில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகம் கடந்த 1999 ஆம் ஆண்டு வீரமணி என்பவரால் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த காப்பகத்தில் பெண்கள் முதியோர் மனவளர்ச்சி குன்றியோர் என்று 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த காப்பகத்தில் தங்கி இருக்கும் பெண் வருவருக்கு காப்பக […]

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர் பாபுஜி (50) இவர் சென்னை நொளம்பூர் எஸ் எம் பி கார்டன் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் பாபுஜி அந்த நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, வெங்கட்ராமனுக்கும், பாபுஜிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவே வெங்கட்ராமன் தரப்பைச் சார்ந்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் […]