புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்டப் பயணமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சரளைப் பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடல், தொண்டர்களின் வெள்ளத்தால் திணறி வருகிறது. நெடுஞ்சாலைப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய […]

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.. மஞ்சளை வைத்து தான் நல்ல விஷயங்களை தொடங்குவார்கள்… மஞ்சள் என்றாலே தனி வைப் தான்.. நம்ம கொடியில் கூட வைப்ரண்டான மஞ்சள் […]

தமிழ்நாட்டில் பெண்களை வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கில், ‘தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ (TWEES) எனும் புரட்சிகரமான திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இத்திட்டம், இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வழக்கமாக தொழில் தொடங்க வங்கிகளில் கடன் வாங்குவதற்குச் சொத்துக்களை அடமானம் வைக்க […]

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ள ஆளுங்கட்சியான திமுக, தனது தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. இதன் முக்கிய நகர்வாக, கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை திமுக தலைமை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் குழுவிற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்க உள்ளார். கடந்த […]

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தீவிரப் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இன்று ஈரோட்டில் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நாமக்கல் மற்றும் கரூரில் அவர் மேற்கொண்ட பிரச்சாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துயரச் சம்பவங்கள் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. […]

தனியார் நிறுவன முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘நைட்ரோபியூரன்ஸ்’ (Nitrofurans) எனும் ரசாயன மூலக்கூறுகள் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முட்டைகளின் தரத்தைப் பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) இந்த அதிரடி நடவடிக்கை, முட்டை உற்பத்தியின் மையமான நாமக்கல் மாவட்டத்திலும் எதிரொலித்துள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பொதுமக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கவும், முட்டைகளின் தரத்தை உறுதிப்படுத்தவும் நாமக்கல்லில் […]

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே அதிரடியாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி […]

அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடி அருகே உள்ள கள்ளக் காடு பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள், அங்குள்ள மரம் ஒன்றில் ஒரு ஆணும் பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்ததில், சடலங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. அவர்கள் உயிரிழந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சடலங்களுக்கு அருகே […]