தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த சரளைப் பகுதியில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்விற்காக ஒட்டுமொத்த கொங்கு மண்டலமும் த.வெ.க தொண்டர்களின் வருகையால் திணறி வருகிறது. இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்தப் பொதுக்கூட்டத்திற்காக சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் […]

திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையிலான நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எழுப்பிய விமர்சனமும், அதற்கு த.வெ.க தரப்பு அளித்த பதிலடியும் பரபரப்பை கிளப்பியுள்ளன. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, விஜய் ஒரு மேடையில் பேசிய “கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும்” என்ற […]

விஜய் பரப்புரை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கருதி இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து தவெகவில் புதிதாக இணைந்த அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை […]

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய விவரத்தை சமர்ப்பிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொருளாதார தடை இன்றி மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு மாதந்தோறும் உதவி தொகைகளையும் தமிழரசு வழங்கி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதந்தோறும் தகுதி உள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பொருளாதார தடை இன்றி கல்வியை தொடர் முடிகிறது.‌ அந்த நிலையில் மற்றொரு திட்டத்தை […]

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். […]

சென்னையில் செயல்படும் அரசு போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் டிசம்பர் 22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழக மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழக அரசின் பயிற்சி மையங்கள் சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரியிலும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரியிலும் […]

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், நேற்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. மேலும் உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுப்பள்ளிகளின் […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜரானார்கள்.. மேலும் தமிழக அரசின் தலைமை செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் காணொளி காட்சி […]