தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்க தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் வழிவகுக்கின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊதிய சட்டத்தொகுப்பு 2019, தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு 2020, சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு 2020 தொழில்துறை சார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம், பணிநிலை சட்டத்தொகுப்பு 2020 ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் 2025 நவம்பர் 21 முதல் அமலுக்கு வரும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. […]

வடகிழக்கு மாநிலத்தில் பலதார மணம் மற்றும் பலதார மண நடைமுறைகளைத் தடைசெய்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய அசாம் பலதார மண தடை மசோதா, 2025 அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.. இந்த மசோதா இனி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2026 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீரான […]

உள்துறை அமைச்சகம் (MHA) புதிய இணைய பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதில், திருமணத் தொடர்பு இணைய தளங்கள் மூலம் ஒருவரின், உணர்ச்சியை பயன்படுத்தி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்புக்கான மையத்தின் (I4C) கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற மிரட்டல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. திருமண தளங்களின் மூலம் நடக்கும் போலி ப்ரொஃபைல்கள் மற்றும் முதலீட்டு […]

ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநரான சோஹன் எம். ராய் தனது வயிறு முழங்கும் (growling) சத்தத்தை கண்டறிந்து தானாகவே உணவு ஆர்டர் செய்யும் ஒரு AI சாதனத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் “ நான் பசியாக இருக்கும்போது அதை புரிந்துகொண்டு தானாகவே Zomato-வில் உணவு ஆர்டர் செய்யும் சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.. இது பெல்ட்டில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதனம் எப்படி வேலை […]

குடியரசு தினத்தையொட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் போட்டிகளை நடத்துகிறது. குடியரசு தினம் 2026 கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு அமைச்சகம், மைகவ் இணையதளத்துடன் இணைந்து 3 போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து மக்களும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைய கலைஞர்கள் நாட்டிற்கான தங்களது தேசபக்தியையும், மரியாதையையும் விளக்கும் வகையில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் https://www.mygov.in/campaigns/republic-day-2026 இணையதளம் மூலம் நேரிடையாக நடைபெறும். தற்சார்பு, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் நீடித்த வளர்ச்சியையொட்டிய இந்தியாவின் பயணத்தை எடுத்துரைக்கும் […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தின்கீழ், வழித்தடம் 4 (காரடி–ஹடப்சர்–ஸ்வர்கேட்–கடக்வாஸ்லா) மற்றும் பாதை 4ஏ (நல் ஸ்டாப்–வர்ஜே–மாணிக் பாவ்) ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 31.636 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு புனே முழுவதும் உள்ள ஐடி மையங்கள், வணிக மண்டலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளை இணைக்கும். இந்தத் திட்டம் […]

அயோத்தி ராமர் கோவிலில் நடந்த கொடி ஏற்ற விழா குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கடுமையாக கண்டித்துள்ளது. சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கிய நீண்ட வரலாறு கொண்ட பாகிஸ்தானுக்கு, பிறரைப் பற்றி பாடம் புகட்ட எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது, “பாகிஸ்தான் போலியான மதசார்பற்ற போதனைகளை வழங்குவதற்குப் பதிலாக, […]

லட்சக்கணக்கான இந்தியர்கள் தினமும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ரயில் பயணங்கள் இனிமையானவை, ஆனால் ஒரு நீண்ட பயணத்தின் போது, ​​நீங்கள் அல்லது உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் பயணி ஓடும் ரயிலில் திடீரென நோய்வாய்ப்பட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பெரும்பாலும், பயணிகள் பதட்டம் அதிமாகி, அடுத்து என்ன செய்வது, ஒரு மருத்துவரை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசிக்கிறார்கள். ஆனால் இந்த கடுமையான பிரச்சனைக்கு இந்திய ரயில்வே மிக […]

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். இன்று இந்தியாவில் உள்ள […]

விஐடி (VIT) போபால் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு கடும் பதற்றம் நிலவியது. வளாகத்தில் மஞ்சள் காமாலை பரவியதால், மாணவர்கள் கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வளாகத்தில் மோசமான சுகாதாரம் மற்றும் மாசுபட்ட தண்ணீரே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறினர். சுமார் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், மத்தியப்பிரதேசம் சேஹோர் மாவட்டத்தில் உள்ள இந்தூர்–போபால் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள வளாகத்தில் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது பல வாகனங்கள் தீவைக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழக சம்பந்தப்பட்ட சொத்துக்கள் […]