மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரான சரத் பவார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதுடன், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவையும் மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தேசிய அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. டெல்லி மேலிடத்திற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு 2 அமைச்சர் பதவிகளையும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
நிதின் நவீன் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டு மத்திய அமைப்புக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பில் மொத்தம் 13 தேசிய துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, பைஜயந்த் ஜெய் பாண்டா, ரேகா வர்மா மற்றும் தாரிக் மன்சூர் ஆகியோர் துணைத் […]
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கலந்துகொண்டு, மாணவிகளுக்குச் சேர்க்கை ஆணைகளை வழங்கிப் பேசினார். அப்போது பேசிய அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வருவது போல, புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இலவசப் பேருந்து வசதியை ஏற்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். […]
காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகா ஏன் தண்ணீர் திறக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாடிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத்த தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, காவிரி நீர் மேலாண்மை […]
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். புனிதமான ஷ்ராவண மாதத்தின் இறுதி திங்கள்கிழமையை முன்னிட்டு, அசோக்தாம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் அசோக்தாம் ஹால்ட் ரயில் நிலையத்திற்கு இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து […]
ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்ட புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளில் உலக சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டது. அமெரிக்க டாலரின் மீதான நம்பகத்தன்மை குறைந்ததன் விளைவாக, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது கைவசமிருந்த அமெரிக்க அரசுப் பத்திரங்களை விற்றுத் தங்கத்தை பெருமளவில் இருப்பு வைக்கத் தொடங்கின. அந்த வகையில், இந்தியாவும் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் […]
மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் ஆசிஷ் பானர்ஜி, பிர்பூமின் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அருகே கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதம் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவரது தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளதாவது, தனது மாணவர் பருவத்திலிருந்தே தான் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் […]
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு சப்ளையில் சிக்கல் எழுந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு முதல்முறையாக பொதுத்துறை மற்றும் தனியார் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அதிகபட்ச உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 13 அன்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, நாட்டில் உள்ள 21 சுத்திகரிப்பு ஆலைகள் […]
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களை சேர்ந்த தமிழர்கள்அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாக […]
பான் மசாலாவை மறைமுகமாக விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகிய 3 பேருக்கும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அதாவது FDA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு விமல் ஏலக்காய் விளம்பரத்தில் இந்த 3 நடிகர்களும் நடித்திருந்தனர். விமல் என்ற பிராண்ட் பெயர் பான் மசாலாவுடன் சந்தையில் பரவலாக தொடர்புபடுத்தப்படுவதால், ஏலக்காய் விளம்பரமும் பான் மசாலாவை மறைமுகமாக […]

