தற்கால அவசர மற்றும் இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த அழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி விடுமுறை நாட்களை புத்துணர்ச்சியுடன் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு மலையேற்றம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மலையேற்ற பிரியர்களின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்து […]

ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி 10 ஆண்டுகளாக காதலித்து கரம் பிடித்த மனைவியை, கூடுதல் பணம் கேட்டு மூக்கு மற்றும் வாயை அழுத்தி கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமேர்கா கிராமத்தை சேர்ந்த புங்கா சந்தியா (23), அதே பகுதியைச் சேர்ந்த ராம் முத்யாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள […]

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், பல மாதங்களாக குப்பைகள் நிறைந்த ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்து வந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல அமைப்பின் தலைவர் நேரடியாக வேலை வாய்ப்பு ஆஃபர் கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி (என்கிற பிட்டு தபாஹி), தன் சொந்த செலவில் (சுமார் ₹30,000) அஜ்னார் (Ajnar) […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஆலோக் குப்தா (27), கடன் பிரச்சனை காரணமாக தனது சொந்த நண்பர்களாலேயே அடித்து படுகொலை செய்யப்பட்டு, மத்திய பிரதேச வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் தொழில்முறை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த ஆலோக் குப்தா, கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திடீரென மாயமானார். மகனைக் காணாமல் […]

கேரளாவில் ஒருவயது பெண் குழந்தையின் உடலுக்குள் ஊசி இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது இந்த ஊசி குழந்தையின் உடலிலேயே விட்டுச் செல்லப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். கோழிக்கோடு சாத்தமங்கலத்தைச் சேர்ந்த வினீஷ் – அஞ்சு தம்பதியரின் குழந்தைக்கு, கடந்த ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில் வலது விலா எலும்புப் பகுதியில் ஊசி இருப்பது தெரியவந்தது. […]

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டை சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள பனம்பரிக்குன்னு பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு 11:40 மணியளவில் பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்ற கார், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக […]

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் தங்கும் மலையேற்ற வீரர்களால் வெளியாகும் சிறுநீர் மற்றும் எரிபொருள் பயன்பாடு, அங்கிருக்கும் பனிப்பாறைகளை வேகமாக உருக்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. Regional Environmental Change என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை, நேபாளத்தின் முதன்மை நில அளவையாளரும் புவிசார் விஞ்ஞானியுமான கிம் லால் கெளதம் (Khim Lal Gautam) தலைமையிலான குழுவினர் நடத்தியுள்ளனர். ஆய்வில், உயரமான பகுதியில் […]

தலைநகர் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, அகமதாபாத் மற்றும் போர்ட் பிளேர் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லி வந்தடைய வேண்டிய பல உள்நாட்டு விமானங்கள் கடுமையாக தாமதமாகின. விமான நிலையத்தின் வருகை பகுதி மற்றும் முனையங்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதால், பயணிகள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் […]

இந்தியாவை கேவலப்படுத்தி, சுகாதாரமற்ற நாடாக காட்டும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அமெரிக்கப் பெண் ஒருவர் அதற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய நபர் ஒருவர், தனது பெரிய தொப்பையின் மீது ரொட்டி உருட்டுவது போன்றும், நெற்றி வேர்வையை துடைப்பது போன்றும் அருவருப்பான காட்சி ஒன்று இணையத்தில் பரவியது. சுமார் 2.8 கோடி பார்வைகளை கடந்த இந்த வீடியோ, இந்தியாவில் […]

GSLV-F17 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (EOS-05) நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்ற காலை நேர செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்திய விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று 36,000 கி.மீ உயரத்தில் உள்ள பூமி சுழற்சிக்கு இணையான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ‘விண்ணில் இந்தியாவின் கண்’ […]