மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில், எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த புனித தினமே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் பக்தர்களால் விரதமிருந்து போற்றி வழிபடப்படுகிறது. இத்திருநாளில் நாம் வைக்கும் வழிபாட்டின் மூலமாக, சாட்சாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணரே நமது இல்லங்களுக்கு நேரில் வருகை தந்து அருள்பாலிப்பதாக ஐதீகம் நிலவுகிறது. குறிப்பாக, மழலைச் செல்வம் இல்லாத தம்பதியினர் இந்நாளில் மனமுருகி விரதமிருந்து கண்ணனை […]

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப், தனது பயனர்களின் வசதிக்காக புதிய கட்டணச் சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி தங்கள் அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுக் கட்டணங்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தே நேரடியாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தும் வகையில் இந்த அதிரடி மாற்றத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இச்சேவை NPCI கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ ‘பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (Bharat […]

தங்களை ‘கைலாசாவின் ஆன்மிக தூதரக உறுப்பினர்கள்’ என அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, கைலாசாவிற்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையே நல்லுறவு மற்றும் நட்புறவை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். புதுச்சேரி ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள நித்யானந்தாவின் ‘கைலாச தியானபீடத்தில்’ அடுத்த ஆண்டு கும்பாபிஷேக விழா […]

தனியார் இருசக்கர வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை ‘பைக் டாக்ஸி’யாக இயக்க மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். பைக் டாக்ஸி சேவைகளை ஊக்குவிப்பதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 8 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும், குறிப்பாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்த மக்களுக்கு இது கூடுதல் வருமானத்தை ஈட்டித் […]

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டுவீழ்த்தி, வீரச் சக்ரா விருது பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான், கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் FLY91 என்ற தனியார் பிராந்திய விமான நிறுவனத்தில் பைலட்டாக இணைந்துள்ளார். அபிநந்தன் வர்த்தமான் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் இந்திய விமானப்படை சேவையிலிருந்து ஓய்வுபெற்று, ஆகஸ்ட் மாதத்தில் ‘ஃப்ளை91’ நிறுவனத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஃப்ளை91 நிறுவனத்தின் செய்தித் […]

மகாராஷ்டிராவில் 200 ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 4 தலைமுறைகள்) பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அக்குழந்தையை ரதத்தில் வைத்து மேளதாளங்கள் மற்றும் நடனத்துடன் குடும்பத்தினர் விமர்சையாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய ‘கார்கி’ என்ற அந்தப் பெண் குழந்தைக்கும், அவரது தாயாருக்கும் குடும்பத்தினர் பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்துள்ளனர். […]

முன்னாள் மேற்கத்திய விமானப் படை தளபதியான ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். அறக்கட்டளையின் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அறக்கட்டளைக்கு மகேஷ் பக்சந்த்கா, மதன் மோகன் பாண்டே மற்றும் நிர்மலா யாதவ் ஆகிய 3 புதிய அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த இவர், […]

வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் வெளிநாட்டு வகை விலங்குகள் மற்றும் பறவைகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என மாநில வனத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மைக்காலமாக மக்காவ், பஞ்சவர்ணக் கிளி போன்ற அரிய வகை பறவைகள் மற்றும் லீமர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வனவிலங்குகளை வீடுகளில் வளர்ப்பதும், வணிக ரீதியாக விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இவற்றை தங்களின் வீடுகளில் வளர்த்து வரும் உரிமையாளர்களும், விற்பனை செய்யும் வியாபாரிகளும் தங்கள் […]

இந்தியாவில் விமானப் பயணத்தை சாமானிய மக்களுக்கும் எளிதாக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் செலவில் 100 புதிய விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ‘உடான்’ (UDAN) திட்டத்தின் கீழ் இந்தப் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் […]

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பீகார் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட விசித்திரமான மீன்களைச் சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்திலிருந்து வரும் வெள்ள நீரில் பிடிபடும் மீன்களைச் சாப்பிட வேண்டாம் என பீகார் அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது. வெள்ள நீரில் அடித்து வரப்படும் மீன்கள்: என்ன ஆபத்து? நேபாளத்தின் திரிசூலி நதியிலிருந்து கண்டகி (Gandak) மற்றும் கோசி நதிகள் வழியாகப் பீகாருக்குள் பெருமளவு […]