விவாகரத்து வழக்குகளில் மனைவியின் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளை ஆதாரமாக பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ஒரு குடும்ப நீதிமன்றம், தனது மனைவி தனக்கு இழைத்த கொடுமைக்கு ஆதாரமாக ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களைப் பயன்படுத்த ஒரு கணவருக்கு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, அந்தப் பெண் உயர் நீதிமன்றத்தை அணுகினார், அந்த பதிவுகள் தனது அனுமதியின்றி செய்யப்பட்டதாகவும், […]

போலியாக அரசியல் நன்கொடை, மருத்துவம் மற்றும் கல்விக் கட்டண விலக்குகள் தொடர்பாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனைகளை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்ட நிறுவனங்களின் 150 வளாகங்களில் ஒருங்கிணைந்த முறையில் சோதனை நடத்தியது. 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, […]

டெல்லி முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள உயர் ரக ஸ்மார்ட்போன்களை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரம்பற்ற லேண்ட்லைன் பில்களையும் அரசு செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், டெல்லி அரசு மொபைல் போன் கொடுப்பனவுகள் குறித்த தனது கொள்கையை திருத்தியுள்ளது, இதன் மூலம் அதன் உயர் அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை கணிசமாக […]

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகள் என உரிமை கொண்டாடி கேரள பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.. எம்ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த மகள் என்று கூறி கேரளாவை சேர்ந்த சுனிதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.. இந்த அடிப்படையில் அவர்களின் சொத்துகளில் எனது பங்கிற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நான் தான் ஜெயலலிதா – எம்.ஜி.ஆருக்கு பிறந்த […]