நாட்டின் பல நகரங்களில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் சாமானிய மக்களை குறிவைத்து அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றனர். தெலங்கானா சிகடபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வெறும் 3,000 ரூபாய்க்காக உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் காட்டி குற்றவாளிகள் செய்த மிரட்டலைத் தாங்க முடியாமல், ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டார். என்ன நடந்தது? காவல்துறை […]

நாட்டில் பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான ஒரு பெரிய அடித்தளத்தை அது ஏற்கனவே அமைத்து வருகிறது. ரயில்வே வலையமைப்பை விரிவுபடுத்துவதோடு, மக்கள் தங்கள் இலக்குகளை விரைவாகச் சென்றடைய ரயில்களின் வேகத் திறனையும் அதிகரித்து வருகிறது. அரை அதிவேக ரயில்களாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்திய பட்ஜெட்டில் அதிவேக ரயில் வழித்தடங்கள் […]

உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பான ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, மத்திய அரசு தற்போது ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, உயிரிழந்த நபர்களின் பெயரில் புழக்கத்தில் இருந்த சுமார் 2.5 கோடி ஆதார் எண்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார். அரசின் சலுகைகள் தகுதியற்றவர்களுக்கு செல்வதை தடுக்கவும், தரவுத்தளத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 134 கோடிக்கும் […]

தெலங்கானா மாநிலத்தின் கிராமம் ஒன்றில், சாயிலு – வினோதா தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாகவே விரிசல் நிலவி வந்துள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சாயிலு, அவரை தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில், இயற்கை உபாதையை காரணம் காட்டி வினோதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சந்தேகம் வலுக்கவே, ஒரு கோடாரியை மறைத்து எடுத்துக்கொண்டு சாயிலு அவரைப் பின்தொடர்ந்துள்ளார். இருள் சூழ்ந்த வயல்வெளிக்கு நடுவே, வினோதா […]

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில், மிட்டாய் போன்ற ஒரு பொருள் வாயில் வெடித்ததில் 3 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார். ராம்நகர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட சௌகிபாஸ் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் அலட்சியம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. அக்ஷு என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுமி, அவசர அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது குணமடைந்து வருகிறார். சம்பந்தப்பட்ட கடைக்காரரை […]

தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.. ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே புதிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. கடைசி நேர பயண முன்பதிவுகளை மேலும் வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் நியாயமான முறையில் செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே 2026-ஆம் ஆண்டிற்கான டாட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே உலுக்கியது. 260-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு பதவி விலகியது. அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், மீண்டும் ஜனநாயக […]

இந்தியாவின் போக்குவரத்து முதுகெலும்பாக திகழும் ரயில்வே துறையில், சுமார் 7,300-க்கும் மேற்பட்ட நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையமும் ஒரு தனித்துவமான பெயரோடு அடையாளப்படுத்தப்படும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் ஒரு ரயில் நிலையம் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவிதப் பெயரும் இல்லாமல் இயங்கி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிராமங்களுக்கு இடையே மூண்ட பெயர் யுத்தம் : மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரிலிருந்து சுமார் 35 கி.மீ […]

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இப்போது பலரையும் பீதியடையச் செய்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு டெலிவரி ஊழியர் கல்லறைத் தோட்டத்தில் இருந்து உணவு ஆர்டரைப் பெற்றதாகத் தெரிகிறது. அந்த டெலிவரி ஊழியர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணை அழைத்து வந்து உணவைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இரவின் இருளிலும் அமைதியிலும் கல்லறையில் இருந்து உணவை வழங்கப் பயந்த அந்த டெலிவரி ஊழியர், அங்கிருந்து […]