தானேவில் மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தனியார் பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், ஷாஹாபூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலையில், பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 5 முதல் […]

மதம் மாறாத ஆத்திரத்தில் லக்னோ லுலு மாலில் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், லக்னோவில் உள்ள லுலு மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே மாலில் அயோத்தியில் உள்ள கோசியானா பஹர்கஞ்ச் ராம்நகரைச் சேர்ந்த மேற்பார்வையாளராக பர்ஹாஸ் (Farhaz) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய […]

சீனா கட்டும் மெகா அணை ராணுவ அச்சுறுத்தலை விட பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார்.. அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர் “ யார்லுங் சாங்போ நதியில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய அணைத் திட்டம், பிரம்மபுத்திரா நதியின் திபெத்திய பெயர், சீனா சர்வதேச நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், அது சர்வதேச விதிமுறைகளுக்குக் […]

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் ஜெட் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 இந்திய விமானப்படை (IAF) விமானிகள் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் ரத்தன்கர் பகுதியில் நிகழ்ந்தது.. இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக IAF தெரிவித்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய […]

ராஜஸ்தானில் இன்று இந்திய விமானப்படையின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே இன்று இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ரத்தன்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் சமநிலையற்றதாகத் […]

மும்பையில் உள்ள MLA விருந்தினர் மாளிகையில் ஒரு கேன்டீன் ஊழியரை சிவசேனா (ஷிண்டே பிரிவு) சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. புல்தானா தொகுதி MLA சஞ்சய் கெய்க்வாட், விருந்தினர் மாளிகை கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரத்தில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.. இதனால் அந்த கேண்டீன் ஊழியரை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் மோசமாக இருந்ததாகவும், அவர் ஊழியர்களை கடுமையாக சாடியதாகவும், […]