இஸ்ரேல்-ஈரான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதலால் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற ‘ எல்லைகளுக்கு அப்பால் ‘ புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது , ​​மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உலகளாவிய மோதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து கடுமையான கவலை தெரிவித்தார் . தற்போது உலகில் மோதல் சூழல் நிலவுவதாக அவர் கூறினார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் […]

PIB உண்மைச் சரிபார்ப்புக் குழு, பயனர்கள் தங்கள் e-PAN அட்டையைப் பதிவிறக்கம் செய்யக் கேட்கும் போலி மின்னஞ்சலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்தது. இந்த மின்னஞ்சல் முற்றிலும் போலியானது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இந்த இணைப்பைக் கிளிக் செய்வது உங்கள் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை மோசடி செய்பவர்களுக்கு அம்பலப்படுத்தக்கூடும். உங்களுக்கு e-PAN பதிவிறக்க மின்னஞ்சல் வந்ததா? இந்தியா முழுவதும் உள்ள பல பயனர்கள் சமீபத்தில் e-PAN அட்டை பதிவிறக்க […]

ஆக்ராவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வழக்கறிஞரால் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தனக்கு உதவுவதாகக் கூறி தன்னை ஏமாற்றி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஆக்ராவின் ஷாகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது சகோதரனுடன் ஏற்பட்ட தகறாரில் 2019 ஆம் ஆண்டு, ஆக்ராவின் சிவில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அங்கு […]

இந்தியாவின் மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பு 2019-21 இன் படி, காற்று மாசுபாடு 13 சதவீத முன்கூட்டிய பிறப்புகளுக்கும், 17 சதவீத குறைந்த எடை பிறப்புகளுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு PLoS குளோபல் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டது, மேலும் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக, […]

டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் அபாயக் குறி அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஹரியானாவில் உள்ள ஹதினிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் யமுனை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட 1.3 மீட்டர் குறைவாகவும், அபாய அளவான […]

மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்த வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டத்திற்கு மத்திய அரசு 99,446 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். உற்பத்தித்துறையில் இத்திட்டம் அதிக கவனம் செலுத்தும் என்று கூறிய அவர், நாட்டில் உற்பத்தியை மட்டுமல்லாமல் ஆராய்ச்சியையும் இது […]

பிஐஎஸ் தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் இந்திய தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ்-ஆல் சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையும் தர நிர்ணய அமைவனமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. பிஐஎஸ்-சின் தரச் சான்றிதழ் இல்லாமல் தலைக் கவசங்களைத் தயாரிப்பது அல்லது விற்பனை […]

குஜராத்தில் சட்டவிரோதமாக ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை செய்த 2,352 பேரில் 741 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக […]