கேரளா நெடுமங்காடு, கரிப்பூரில் உள்ள முகவூர் மகாவிஷ்ணு கோயிலின் குளத்தின், தண்ணீரில் மூளையை உண்ணும் அமீபாவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் நெடுமங்காடு, கரிப்பூரில் உள்ள முகவூர் மகாவிஷ்ணு கோயிலின் குளத்தில், குளித்த மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அமீபிக் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் தடயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆய்வக சோதனைகள் நுண்ணுயிரி இருப்பதை உறுதிப்படுத்தின, இது அப்பகுதி […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் புதுப்பிப்பு செய்யப்படும் வகையில் புதிய ‘ECINET’செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது. இத்தகவல்கள் வழங்க இந்த அமைப்பு உதவுவதோடு, இவ்வாண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இது அமலுக்கு வர உள்ளது. முன்னர் பயன்படுத்தப்பட்ட கைமுறை அறிக்கையிடல் முறைகளுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய செயல்முறை நேர தாமதத்தை […]
பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் திருமணச் சான்றிதழலை இணைப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் திருமணச் சான்றிதழ் அவசியம் என முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, திருமணச் சான்றிதழுக்கு பதிலாக ‘இணைப்பு J” என்ற எளிமையான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரரின் பெயர், இருப்பிடம், வாழ்க்கை துணையின் பெயர் ஆகிய விவரங்கள் […]
வளர்ச்சியை நோக்கி வேகமாக நகரும் நாடு, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் நான்காவது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி நாடாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆயோக் இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி நாடாக மாறியுள்ளது என்று கூறியிருந்தாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா 4 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட நாடாக மாறும் என்று IMF நம்புகிறது. இந்தியா எப்படி வளர்ச்சி […]
தெற்காசியாவில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் மக்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் கடுமையான வெப்ப அபாயங்களை எதிர்கொள்வார்கள் என்று உலக வங்கி அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. “ஆபத்திலிருந்து மீள்தன்மை வரை: தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்கள் தகவமைப்புக்கு உதவுதல்” என்ற தலைப்பிலான அறிக்கையின்படி, வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் தெற்காசியா மிகவும் காலநிலை பாதிப்புக்குள்ளான பகுதியாகும். 2030 ஆம் ஆண்டு வாக்கில், தெற்காசிய மக்கள் தொகையில் சுமார் 89% […]
ஜூன் 15 ஆம் தேதி நீட் முதுகலை தேர்வை நடத்துவது சாத்தியமில்லை என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மருத்துவத்தில் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான இந்தத் தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வாரியம் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது. முன்னதாக ஜூன் 15 ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நீட் முதுகலை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் மே 30 […]
2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5% ஆகக் குறைக்கும் என்று நோமுரா கணித்துள்ளது. உலகளாவிய தரகு நிறுவனமான நோமுராவின் அறிக்கையின்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள்,ரெப்போ விகிதத்தை முழு சதவீதப் புள்ளியால் – 6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வாய்ப்புள்ளது. ‘ஆசியா H2 அவுட்லுக்’ அறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ரிசர்வ் வங்கியின் கணிக்கப்பட்ட 6.5 […]
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தன. இதையடுத்து பதற்றம் அதிகரித்ததால் இருநாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் […]
கணவர் இறந்துவிட்டாலும், ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உரிமையாக பாதுகாப்பான தங்குமிடத்தை அங்கீகரிக்கும் வகையில், மனைவியை அவரது திருமண வீட்டிலேயே வசிக்க அனுமதியளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகும், அந்தப் பெண்ணும் அவரது குழந்தையும் கணவரின் வீட்டிலேயே வசித்து வந்தனர். இருப்பினும், அவரது கணவரின் தாயார் மற்றும் உடன்பிறந்தவர்கள் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தத் தொடங்கியதால், அவர் பாதுகாப்பு கோரி பாலக்காடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை […]
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 6ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இதைத்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கிறோம். இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியை நிர்ணயிக்கும். இந்த விகிதம் உயர்ந்தால் வட்டியும் உயரும், கட்ட வேண்டிய தொகையும் உயரும். இந்தாண்டில் […]

