பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பதவியேற்ற 51,000க்கும் மேற்பட்டோருக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இளைஞர் சக்திக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களை வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் ஊக்கிகளாக மாற்றுவதற்கும் நமது அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை ரோஸ்கர் மேளா பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உங்கள் இந்தப் புதிய பயணத்திற்கு […]

PM கிசான் யோஜனா திட்டத்தில் 20வது தவணை ரூ.2000 பெற, விவசாயிகள், இன்றே சில முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan) திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. நீங்கள் பிஎம் கிசான் சம்மான் யோஜனா திட்டத்தில் (PM Kisan Samman Nidhi Yojana) பதிவு செய்திருந்தால், இன்றே சில முக்கியமான […]

ஒரு X பயனர் இந்தியர்களை “புற்றுநோய்” என்று அழைத்தபோது, எலோன் மஸ்க்கின் AI சாட்போட்டான க்ரோக், உண்மையை அடிப்படையாகக் கொண்ட பதிலளித்து இணையத்தில் பாராட்டைப் பெற்றது. கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது சமூக ஊடக தளமான Xக்காக உருவாக்கிய க்ராக் (Grok) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், சமீபத்தில் இந்தியர்களை குறிவைத்து இனவெறி கருத்து துல்லியமாக பதிலளித்து இணையத்தில் வைரலானது. அமெரிக்காவை சேர்ந்த @tonyrigatonee என்ற X பயனர், […]

ஜூலை மாதம் அரசு ஊழியர்களைத் தவிர வேறு யார் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் சொல்லுங்க.. ஏன் என்றால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பென்சன் உயர்வு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறது. முதலாவது ஜனவரியிலும் இரண்டாவது ஜூலையிலும் அகவிலைப்படி உயர்வைக் கொடுக்கும். […]

கல்வி அணுகலை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக , உத்தரபிரதேச அரசு, பள்ளிகளிலிருந்து குறைந்தது ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 பயணப்படி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, பந்தேல்கண்ட் மற்றும் தொலைதூர சோன்பத்ராவின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயணச் சிரமங்களை எதிர்கொள்ளாமல் தங்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளை அடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஜான்சி, சித்ரகூட், ஜலான், ஹமிர்பூர், […]

வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டாமல் கைகளில் எடுத்துச்சென்று சுங்கச்சாவடியில் காண்பிக்கப்படும் FASTagகள் Blacklist செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நிற்கும் வாகன நெரிசலில், இனி மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. சில்லறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது என்ற பிரச்னையும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், ஃபாஸ்டேக் எனும் அதிநவீன தொழில்நுபத்தை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்தவகையில், நாடு முழுவதும்சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பணம் […]

ஒடிசாவின் ராயகடாவில் ஒரு இளம் ஜோடியின் மீது காதல் திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்த கிராமவாசிகள், அவர்களின் கழுத்தில் கலப்பை கட்டி எருதுகளை போல வயலை உழ வைத்த கிராம மக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும், சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இதுபோன்ற பல வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் வைரலாகி வருகின்றன. இப்போது இதுபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் சிலர் […]

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மெட்ராஸின் 62வது பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவரங்களை வெளியிட்டார். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பேசிய அஜித் தோவல், ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையை வெற்றியைப் பாராட்டினார்.. பாதுகாப்பு திறன்களில் […]