பாரத மாதாவை மதச் சின்னம் என்று அழைத்ததற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது வழக்கம். கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பாரதமாதா படம் வைக்கப்பட்டு மலர் தூவி வழிபட்டதற்கு ஆளும் சி.பி.எம் கட்சியைச் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மகாராஷ்டிராவில் இரண்டு மாதங்களில் மொத்தம் 479 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகராந்த் ஜாதவ் வெள்ளிக்கிழமை மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார். ரோஹித் பவார், ஜிதேந்திர அவ்ஹாத், விஜய் வடெட்டிவார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜாதவ், மார்ச் 2025 இல் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் 250 தற்கொலைகள் நடந்ததாகக் கூறினார். ஏப்ரல் 2025 இல், மாநிலத்தில் 229 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மார்ச் […]
கேரளாவில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில், 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 2 பேருக்கு நிபா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அம்மாநில சுகாதாரத் துறை கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலக்காடு மற்றும் மலப்புரத்தை சேர்ந்த இருவருக்கு நிபா பாதிப்பு உறுதியானது. கூடுதல் ஆய்வுக்காக மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்பப்பட்டுள்ளன. பாலக்காடு […]
பயணத் திட்டமிடலை மேம்படுத்த, இந்திய ரயில்வே ரயில் முன்பதிவு விளக்கப்படம் தயாரிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இந்திய ரயில்வே ரயில் முன்பதிவு விளக்கப்படம் தயாரிப்பது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் பயணிகளுக்கு முன்கூட்டியே டிக்கெட் நிலை குறித்து அதிக தெளிவை வழங்குவதன் மூலம் […]
கிருஷ்ண ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா வழக்கில், எதிர்கால சட்ட நடவடிக்கைகளில் இக்தா மசூதியை “சர்ச்சைக்குரிய கட்டமைப்பு” என்று அதிகாரப்பூர்வமாக குறிப்பிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்தகைய அறிவிப்பு இந்த விஷயத்தை முன்கூட்டியே தீர்ப்பளிப்பதாக இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்திற்குத் தலைமை தாங்கிய நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, இந்த மனு “இந்த கட்டத்தில்” தள்ளுபடி செய்யப்படுவதாக வாய்மொழியாகக் குறிப்பிட்டார். […]
புதிய யுக இராணுவ தொழில்நுட்பங்கள் குறித்த FICCI ஏற்பாடு செய்த உயர்மட்ட பாதுகாப்பு நிகழ்ச்சியில், துணை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பாகிஸ்தான், சீனா மற்றும் துருக்கி இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். ஆபரேஷன் சிந்தூரின் போது காணப்பட்ட நவீன போர் சவால்களை கருத்தில் கொண்டு இந்தியா தனது வான் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப […]
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா (BOB), உள்ளூர் வங்கி அதிகாரிகள் (LBO) ஆட்சேர்ப்புக்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் 2,500 காலியிடங்களை நிரப்புவதே இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் நோக்கமாகும். இதில் தமிழ்நாட்டிலும் மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் bankofbaroda.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் […]
பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்ற அறிவிப்பை டெல்லி அரசு வாபஸ் பெற்றுள்ளது. பெட்ரோல் பம்புகளில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்று டெல்லி அரசு சமீபத்தில் அறிவித்தது. 10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.. இது பரவலான விமர்சனங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு […]
கோவிட்-19 தடுப்பூசியான கோவிஷீல்ட் பாதுகாப்பானது என்றும், அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டுள்ளது என்றும் Serum Institute of India தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா, ‘கொரோனா தடுப்பூசியின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்’ என்ற சந்தேகத்தை எழுப்பி இருந்தார். இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய […]
Nirmala Sitharaman and Vanathi Srinivasan are likely to be in the fray for the post of BJP national president, sources said.

