நாட்டில் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் 424, டெல்லி 294, குஜராத் 223, தமிழ்நாடு 148, கர்நாடாகா 148, மற்றும் மேற்கு வங்காளத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 4 நாட்களில் இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. கேரளா 1,147 […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தன்னை ஏமாற்றியதாக பெண் ஒருவர் புகாரளித்திருந்த நிலையில், நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் ஆதாரமற்றவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த ஆண் மீது வழக்கை தொடர்வது என்பது “நீதிபதியை நக்கல் செய்வதற்கு சமமானது” எனக் கடுமையாக சாடியுள்ளது. இந்த வழக்கில், புகாரளித்த பெண்ணின் பாலியல் நடத்தை மற்றும் பிடிவாதமான மனநிலை குறித்து அறிந்தபோது, […]
நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைப்பதற்கும், உள்நாட்டு பதப்படுத்தும் தொழில்களைப் பாதுகாப்பதற்கும் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு 10 சதவீதம் குறைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி குறைப்பு உடனே அமலுக்கு வந்ததாகவும் மத்திய […]
ஜனவரி-மார்ச் காலாண்டில் (Q4 FY25) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது, இது கடந்த நான்கு காலாண்டுகளில் மிக உயர்ந்ததாகும். அதே நேரத்தில், 2025 நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது என்று கூறப்படுகிறது. இந்த தகவல் நேற்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் […]
நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு கொண்டுவந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிம் கிசான்) திட்டம். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளாக இந்தப் பணம் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே அரசு […]
உலகின் பிற நாடுகளுடனும் இந்தியா ஒற்றுமையை அதிகரிக்க விரும்புவதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். குஜராத்தின் வதோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (மே 30, 2025) வெளிநாட்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், சர்வதேச ஒத்துழைப்பு, தன்னிறைவு இந்தியா மற்றும் வசுதைவ குடும்பகரம் ஆகியவற்றின் […]
ஜூன் மாதம் சாதாரண குடிமக்களுக்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் ஜூன் 1 முதல் எல்பிஜி எரிவாயு விலைகள் முதல் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வரை சில முக்கியமான மற்றும் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். எனவே நாளை (ஜூன் 1) முதல் என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை இனி பார்க்கலாம். நாளை முதல் கேஸ் சிலிண்டர், ரேஷன் கார்ட், ஆதார் அட்டை, கிரெடிட் கார்ட், ஏடிஎம் மூலம் பிஎப் […]
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலின் போது ரகசிய தகவல்கள் கசிய விட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், பிரபல யூடியூபர் சன்னி யாதவ் உட்பட 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சன்னி யாதவ். பைக் மூலம் இந்தியாவைச் சுற்றியும், பிற நாடுகளுக்கும் சென்று சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு புகழ் பெற்றவர். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியபோது அவர் […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். 18 வயதுக்குட்பட்ட அந்த சிறுமி வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த ஒரு மர்ம நபர், தன்னை நடன பயிற்சியாளர் என சிறுமியிடம் கூறியுள்ளார். மேலும், சிறுமிக்கு நடனம் கற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார். அந்த சிறுமியும் அதனை நம்பி, நடனம் கற்றுக் கொள்ளும் ஆசையில், அந்த நபரின் காரில் […]
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர். இந்த இளைஞர், கடந்த 2021ஆம் ஆண்டு நொய்டாவை சேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும், ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக டெல்லி கன்னாட்ப்ளேஸ் பகுதிக்கு வருமாறு அந்தப் பெண்ணை அவர் அழைத்துள்ளார். பின்னர், அங்கு ஒதுக்குப்புறமாக அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று, அவருக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து […]

