மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முதலாமாண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மருத்துவ அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் அனைத்து கூற்றுகளும் மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் கடித்து வைத்த பற்களின் அடையாளங்கள், நகக் கீறல்கள் மற்றும் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கு வங்க […]

ஆக. 1 முதல் GPay, Paytm, PhonePe உள்ளிட்ட UPI பேமெண்ட் செயலிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த டிஜிட்டல் உலகத்தில் UPI பரிவர்த்தனை முறையே பெரும்பாலான மக்கள் நம்பி உள்ளனர். சிறிய டீ கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையிலேயே பணம் அனுப்பி வருகின்றனர். மற்றவர்களுக்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கும் UPI செயலிகளையே நம்பி உள்ளனர். UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை […]

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று (ஜூன் 27) காலை கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், நேற்று 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் […]

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் அவர் வழங்கினார்.. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் உடன் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். கட்சி மேலிடம் உத்தரவிட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலியாக உள்ள […]

புதுச்சேரியில் பாஜக நியமன MLA-க்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமலிங்கம், வெங்கடேசன், ரமேஷ் பாபு ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபா நாயகரிடம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இவர்கள் ராஜினாமா செய்ததற்கான தெளிவான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பாஜக மாநிலக் குழுவில் இடம்பெறும் உள்கட்சி முரண்பாடுகள், அமைச்சரவை பதவிக்கு இடமாற்றங்கள், மற்றும் அணிச்சேர்க்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட […]

அகமதாபாத்தில் நடந்த ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது, ​​ஊர்வலத்துடன் வந்த யானைகள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால், அங்கிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரத யாத்திரையின் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய யானைகளை மீண்டும் கட்டுப்படுத்த யானைப் பாகன்கள் போராடுகின்றனர். ஆனால் மக்கள் பீதியில் சிதறி ஓடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் அந்த யானைகளில் […]

கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் ஒரு சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு கல்லூரி ஊழியர்களால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஜூன் 25 ஆம் […]

700க்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 8.5 லட்சம் போலி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என்பது சிபிஐ சோதனையில் தெரியவந்துள்ளது. சைபர் மோசடி மற்றும் ‘டிஜிட்டல் கைது’ வழக்குகளை தடுக்கும் வகையில் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 42 இடங்களில் ஆபரேஷன் சக்ரா-5 என்ற பெயரின் சிபிஐ சோதனை மேற்கொண்டது. போலி வங்கிக் கணக்குகள் மூலம் மக்களை ஏமாற்றிய குற்றவாளிகளின் மறைவிடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. […]

143 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில், பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தையின் அடையாளம், குடியுரிமை, கல்வி மற்றும் அரசு சேவைகள் போன்றவற்றிற்கான முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் (RGI) ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார். ஜூன் 12, 2025 தேதியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தில், RGI அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி: “புதிய குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யும் நடவடிக்கையை மருத்துவமனையில் இருந்தபடியே முடிக்க, […]