ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கான முதன்மை வருமான ஆதரவுத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 20வது தவணைக்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தவணையை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிகழ்வின் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, விவசாயிகள் தங்கள் பயனாளிகளின் நிலையைச் சரிபார்த்து, அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்பதையும், பிரதம மந்திரி கிசான் […]

உங்கள் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா ? நம்மில் பலரும் அரசு நிறுவனங்களிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ வேலை பார்த்து பணம் சம்பாதிக்கிறோம்.. பலர் தங்கள் சொந்த தொழில் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் உங்கள் வருமானத்திற்கு ஏற்ப நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஒவ்வொருவரின் வருமானமும் வேறுபட்டது. ஆனால் உங்கள் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? வருமான […]

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பனில் அமர்நாத் யாத்திரை சென்ற பயணிகள் மீது பேருந்துகள் மோதியதில் 36 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இன்று காலை 5 பேருந்துகள் மோதியதில் குறைந்தது 36 அமர்நாத் யாத்ரீகர்கள் லேசான காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சந்தர்கூட் அருகே காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஜம்முவின் பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் […]

பெங்களூரு-டெல்லி விமானத்தை இயக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானி மயங்கி விழுந்தார். பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு விமானத்தை இயக்குவதற்கு சற்று முன்பு ஏர் இந்தியா விமானி ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விமானி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் டெல்லி விமானத்தை இயக்க விமான நிறுவனம் மற்றொரு விமானியை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. “ஜூலை 4 அதிகாலையில் எங்கள் விமானிகளில் ஒருவருக்கு மருத்துவ […]

20 ஆண்டுகளுக்கு பிறகு, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இன்று வோர்லியில் நடைபெறும் ஒரு கூட்டுப் பேரணியில் கலந்து கொள்கின்றனர்.. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி அரசாங்கம் சமீபத்தில் மாநிலத்தின் தொடக்கப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கும் முடிவை வாபஸ் பெற்ற பிறகு, ‘அவாஜ் மராத்திச்சா’ (மராத்தியின் குரல்) என்ற வெற்றிப் பேரணியை இரு கட்சிகளும் […]

பாரத மாதாவை மதச் சின்னம் என்று அழைத்ததற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொள்ளும் விழா மேடைகளில் பாரதமாதா படம் அலங்கரித்து வைப்பது வழக்கம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பாரதமாதா படத்துக்கு கவர்னர் மலர் தூவி வணங்குவது வழக்கம். கவர்னர் மாளிகையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பாரதமாதா படம் வைக்கப்பட்டு மலர் தூவி வழிபட்டதற்கு ஆளும் சி.பி.எம் கட்சியைச் […]

மகாராஷ்டிராவில் இரண்டு மாதங்களில் மொத்தம் 479 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகராந்த் ஜாதவ் வெள்ளிக்கிழமை மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார். ரோஹித் பவார், ஜிதேந்திர அவ்ஹாத், விஜய் வடெட்டிவார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜாதவ், மார்ச் 2025 இல் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் 250 தற்கொலைகள் நடந்ததாகக் கூறினார். ஏப்ரல் 2025 இல், மாநிலத்தில் 229 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மார்ச் […]