சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 3வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. […]

ஜூலை மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ஜூன் மாதம் முடிவடைந்து ஜூலை மாதம் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிராந்திய விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட ஜூலை மாதத்தில் மொத்தம் […]

ரயில் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே சிறிதளவு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால் நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. மலிவான, வசதியான பயணம் உள்ளிட்ட காரணங்களால் பலரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இந்த நிலையில் ரயில் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே சிறிதளவு […]

ஜூலை 2025 இல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன என்று தற்போது பார்க்கலாம். ஜூலை மாதம் பணம் தொடர்பான பல பெரிய மாற்றங்களுடன் தொடங்குகிறது.. இது சாதாரண மக்களின் பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கும். தட்கல் டிக்கெட் புக்கிங் முதல் வங்கிகளின் சேவை கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான புதிய விதிகள் வரை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. நீங்கள் சரியான […]

8வது ஊதியக் குழுவின் கீழ் ஓய்வூதியக் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 8வது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால் 8வது குழுவின் தலைவர், உறுப்பினர்களை முறையாக நியமித்தல் மற்றும் விரிவான குறிப்பு விதிமுறைகள் (ToR) வெளியிடுதல் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 8வது ஊதியக் குழு ஜனவரி 1, […]

இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இனி டிஜிட்டல் கட்டணங்களை ஏற்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு நெறிப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ தபால் நிலையங்களின் கணக்குகள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அமைப்புடன் இன்னும் ஒருங்கிணைக்கப்படாததால், டிஜிட்டல் கட்டணங்களைச் செயல்படுத்த முடியவில்லை. இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) சிறந்த நிதி […]