பாலம் இடிந்து விபத்துக்குள்ளான 24 மணி நேரத்திற்கு பின்னர் 9 பேர் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் மோர்பி பகுதியில் நடந்த விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலம் இடிந்த விபத்து நேற்று மாலை நடந்த நிலையில் இன்று 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள், டிக்கெட் விற்பனை செய்தவர்கள், பாதுகாவலர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் மாநில முதலமைச்சருமான சரத் பவாருக்கு இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சரத் பவாரை தொடர்பு கொண்டு அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வருகிற நவம்பர் […]

தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக GISAID என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, அது உருமாற்றம் அடைந்து மக்களை பயமுறுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த […]

கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ள ராஜ்யோத்சவாவிற்கு கலை நிகழ்ச்சிக்காக பகத்சிங் தூக்கிலிடப்படும் காட்சி ஒத்திகை பார்த்தபோது மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் சஞ்சய் கவுடா . நாளை நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சிக்காக மாணவன் பகத் சிங் வேடத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். நேற்று இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகத்தில் நடிக்க தீவிரமாக ஒத்திகை […]

குஜராத் தொங்கும் பாலம் சுமார் 7 மாதங்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டு நான்கே நாளில் இப்படி ஒரு சோகம் அரங்கேறி உள்ளது. குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மோர்பி பகுதியில் ஆற்றை கடக்க வசதியாக அமைக்கப்பட்டது தொங்கும் பாலம். 1879ம் ஆண்டு கட்டப்பட்டது 230 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக […]

பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தும் முறைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இன்றும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுபடுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தனர். எனவே, இரு விரல் சோதனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என […]

ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பொறியியல் படித்த டிப்ளமோ மாணவர் உட்பட மூன்று மைனர் சிறுவர்களை, 12 வயது நிறைந்த மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள குற்றச்சாட்டில் போலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையில் சில நாட்களுக்கு முன்பு இது நடந்திருந்தாலும் அச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுவரை சிறுமி நடந்ததை தன் பெற்றோரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் அந்த வீடியோவை பார்த்து, […]

டெல்லியின் படேல் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (அக் 28) சிறுவன் ஒருவன் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டிருப்பதாக படேல் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், அங்கு சென்று அந்த சிறுவனை மீட்டு சர்தார் படேல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் மனோஜ் குமார் நேகி […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்கள். இது காட்டுப்பகுதி என்பதால் வன உயிரினங்கள் மிகவும் உலாவி வரும். அதுமட்டுமின்றி பாம்பு அடிக்கடி அங்கே பலரையும் கடித்து வரும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. நேற்று அப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுவனை பாம்பு ஒன்று தீட்டியது. அதனால், ஆத்திரமடைந்த சிறுவன் அந்த பாம்பை திருப்பி இருமுறை கடித்து பாம்பையே துண்டாக்கியுள்ளான். இதில் […]

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றைக் கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான தொங்கும் பாலம் ஒன்று இருந்து வருகிறது. இந்த பாலமானது கடந்த 7 மாதத்திற்கு முன்பு சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டும், குஜராத்தின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் இந்த பாலம் அக்டோபர் […]