சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது … என்ற தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் . முன்னதாக செய்தியாளர்களைச்சந்தித்தபோது இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க டாலரின்மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது. அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு […]

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா, மாரடைப்பால் காலமானார். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு […]

கேரளா நரபலி விவகாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஷாஃபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, முகமது ஷாஃபி-யை அழைத்துச் சென்று கொச்சியில் உள்ள அவரது வீடு, ஹோட்டல் […]

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு கட்டணங்களும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு […]

ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் புனே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த அக்.13ஆம் தேதி தனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதில், தனக்கு நெருக்கமான 3 ஆண் நண்பர்களையும், 2 பெண் நண்பர்களையும் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தோழி என்றும் பாராமல் […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Director (Industrial Systems & Products பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 45 […]

வீரப்பனை சுட்டு வீழ்த்திய தமிழக ஐபிஎல் அதிகாரி கே.விஜயகுமார், உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். தமிழக கர்நாடக எல்லைகளில் காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரப்பனை சுட்டு வீழ்த்தியவர் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார். இவர் 1975இல் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தவர். பின்னர் சேலம், தருமபுரி மாவட்டங்களில் பணிபுரிந்து அதன் பிறகு மத்திய அரசு பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அங்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் […]

அக்கினி வீரர்களுக்கு வங்கி வசதிகளை அளிக்கும் விதத்தில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் […]

தாயுடன் காணாமல்போன 2 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாயை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் தாஹோத் பகுதியைச் சேர்ந்த பதியா பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நித்தேஷ் தங்கரியா என்பவரின் பண்ணையில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று (அக்.15) மாலை வீடு திரும்பிய பதியா, ​தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் […]

பெற்ற மகளை கரும்பு காட்டுக்குள் 3 நாட்கள் கட்டி போட்டு உணவு தராமல் நரபலி கொடுத்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் பவேஷ் அக்பரி. இவருக்கு தாரியா (14) என்ற மகள் இருந்தார். இவர் சூரத் பகுதியில் தங்கி, அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பவேஷ் பெரும் பண நெருக்கடியில் இருந்துள்ளார். இதனால், கடன் […]