முன்னறிவிப்பின்றி ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் 12 செல்போன் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் சிறந்த திட்டங்களில் ப்ரீபெய்டு திட்டங்கள்தான். இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய திட்டமான சில திட்டங்களை ஜியோ நீக்கியது பெரும் கவலை கொள்ள வைத்துள்ளது. ஜியோ திட்டங்கள் சாமானிய மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினருக்கு ஏற்ற வகையில் ரூ.151 முதல் ரூ.3119 வரை உள்ளது. நீக்கப்பட்ட திட்டங்களில் […]

பெங்களூருவில் ஒரு நிமிடத்தில் தானாக சட்னி , சாம்பாருடன் இட்லி வழங்கும் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு தொழிலதிபர்கள் ஷரன் ஹிரேமத் , சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோர் ஸ்டார்ட் அப நிறுவனம் ஒன்றை தொடங்கினர். இவர்கள் இந்த இயந்திரத்தை வடிவமைத்து அசத்தி உள்ளார்கள். ஏ.டி.எம். எப்படி கார்டு போட்டால் பணம் வருமோ அதே போல பணம் போட்டால் இது சுட சுட இல்லி தருகின்றது. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் காலை உணவு […]

இண்டிகோ விமானத்தில் இசையமைப்பாளர் கரப்பான்பூச்சி இருந்ததை வீடியோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டதை தொடர்ந்து விமான நிறுவனம் மன்னிப்புகோரியுள்ளது. இசையமைப்பாளர் ரிக்கி கெஜ் , பாட்னாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது கரப்பான்பூச்சி இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை வீடியோ எடுத்த இசையமைப்பாளர் ரிக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் டுவீட் செய்துள்ளார். ’’ அக்டோபர் 13ம் தேதி பாட்னாவிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது ஒரு […]

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக இருந்தது. இது, 2022 ஆகஸ்ட் மாதத்தில்12.41%ஆக இருந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் உணவு தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய உணவு குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 175.2 ஆக சரிந்தது. இந்த இலக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 176.0 ஆக இருந்தது. உணவு குறியீட்டின் அடிப்படையில் பணவீக்க விகிதம் ஆகஸ்ட், 2022 9.93% லிருந்து செப்டம்பர், 2022-ல் 8.08%ஆக […]

மணிப்பூரில் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்கள் இனி அரசின் பென்ஷன் போன்ற சலுகைகளை பெற முடியாது மற்றும் மாநில அரசு வேலைகளுக்குத் தகுதி பெற மாட்டார்கள் என அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தொடர்பு அமைச்சர் எஸ் ரஞ்சன் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள எந்தவொரு நபரும் அல்லது குடும்பமும் வேலை தவிர பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்ததாக மணிப்பூரின் […]

மொத்தம் 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இங்கு பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவை, ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசால் 21 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. தற்போது, இமாச்சலப் […]

வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை […]

71 வயது முதியவருடன் நெருக்கமாகப் பழகி ரூ. 3 லட்சம் ஏமாற்றிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவரது ஆண் நண்பர்கள் மூலம் 71 வயது முதியவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து முதியவரும் ராஜியும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இதையடுத்து, இருவரும் உல்லாசமாக இருந்ததை ராஜி, முதியவருக்குத் தெரியாமல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். பின்னர், அந்த […]

கேரளாவை தொடர்ந்து பெற்ற மகளை பண பிரச்சனை காரணமாக பெற்றோர்களே நரபலி கொடுத்துள்ள சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சோம்நாத் பகுதியைச் அடுத்துள்ள தாரா கிர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் 14 வயது சிறுமி. சூரத் நகரில் பள்ளியில் படித்து வந்த சிறுமியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் மதிய நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதன்பிறகு, சிறுமி பள்ளி செல்லவே இல்லை. […]

கேரளாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது கேரளாவில் நடைபெற்ற நரபலி பூஜை. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறுவர்-சிறுமிகளை அடைத்து வைத்து அவர்களைப் பூஜைகளுக்கு பயன்படுத்தியதாக பெண் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாளபுழா பகுதியில் வசந்தி அம்மா மடத்தில் பெண் சாமியார் ஷோபனா (52) வசித்து வருகிறார். இங்கு பல வருடமாக மந்திர செயல்கள் ஷோபனா […]