திருமணத்தில் மணப்பெண் விருந்தினருக்குப் பறக்கும் முத்தம் கொடுத்ததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் சம்பல் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்கும் போது மணப்பெண் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் மணப்பெண்ணின் தாயார், சிகரெட் பிடித்து வரும் விருந்தாளிகளின் முகத்தில் ஊதியுள்ளார். இந்த சம்பவம் மணமகனுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இருவரின் செயல்களினால் விரக்தியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இது குறித்து, மணமகனின் குடும்பத்தினர் கூறுகையில், […]

கேரளாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை சற்று கால தாமதமாக ஜூன் 8ஆம் தேதி துவங்கியது. இருப்பினும் ஜூன் மாதம் முழுவதுமே கேரளாவில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு தீவிரமடையவில்லை. ஆனால் தற்போது ஜூலையில் தென்மேற்கு பருவமழை அங்கு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளாவில் இடுக்கி மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் […]

நீட் தேர்வு எழுதுவதில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட மோசடி கொம்பளை டெல்லி காவல்துறை அதிரடியாக கைது செய்திருக்கிறது. இந்த மோசடி வழக்கு குறித்து எய்ம்ஸ் மருத்துவ மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு சென்ற மே மாதம் 7ம் தேதி நடந்தது சரியாக 499 நகரங்களில் நடந்த இந்த தேர்தலில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் […]

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மும்பைக்காண இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளது. இது முடித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, இன்று காலை முதல் மிதமான மழை முதல் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. ஆகவே அடுத்த 3 தினங்களுக்கு மும்பை மாநகரத்திற்கு மஞ்சள் […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Apprenticeship Training பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 1104 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜூலை […]

ஒடிசா விபத்து ஏற்பட்டதிற்குத்‌ தவறான சிக்னல்‌ கொடுத்தது தான்‌ காரணம்‌ என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ கடந்த மாதம் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 300-க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையானது நடைபெற்று வருகிறது. […]

ஆண்கள் தேசிய ஆணையம் அமைக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட உள்ளது. இதில் இன்று முக்கிய வழக்குகளாக மணிப்பூர் கலவரம், தன்பாலின திருமண ஒப்புதல், ஆண்கள் ஆணையம் அமைக்க பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தேசிய அளவில் ஆண்கள் ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் […]

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் […]

இதுவரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே 19-ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப […]

விதிமீறல்கள் காரணமாக இந்தியாவில் மே மாதம் மட்டும் 65 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கிட்டத்தப்பட்ட 500 மில்லியன் வாட்ஸ் அப் பயனாளர்கள் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புதிய வசதிகளையும் செய்யவும் அந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கியூ ஆர் கோட் கொண்டு வாட்ஸ் அப் செயலியின் மூலமாகவே புதிய சாதனத்திற்கு சாட் ஹிஸ்டரியை பரிமாறிக் […]