மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மன நிறைவான ஆட்சி நடைபெறுகிறது. மன நிறைவு திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகிறது. யாரிடமும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. மின்சார திட்டம் என்றால் எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கிறது. குடிநீர் திட்டத்தில் எல்லோருக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் யாரிடமும் பாகுபாடு காட்டப்படாது. ஜாதி, […]

மகாராஷ்டிரா மாநிலம் துணை வில் இருக்கின்ற ரயில் நிலையம் மூன்றில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலர் அந்த பகுதியில் உள்ள நடைமேடையிலேயே உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது ரயில்வே காவலர் ஒருவர் தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றியபடி செல்லும் காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. முகத்தில் திடீரென்று தண்ணீர் பட்டதும், உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பதறி எழுந்து பார்ப்பதும், அந்த காவலர் எதுவுமே நடக்காததை போல நடந்து செல்வதும் […]

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாளமாக காணப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதாரின்றி இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இத்தகைய நிலையில், தான் ஆதாரை பயன்படுத்துவதற்கான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அதனடிப்படையில், இனிவரும் காலங்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி […]

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என முதலமைச்சர் பிரேன் சிங் கருத்து தெரிவித்து உள்ளார். மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிப்பதற்கு ஆதரவாக அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு, அம்மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓபியம் பயிரிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி-ஜோமி பழங்குடியினர் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பழங்குடியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. மாநிலத்தில் நடைபெறும் […]

டெல்லி வளர்ச்சி ஆணையம் 687 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை கோரியுள்ளது. பணியிடங்கள்: Jr engineer(civil) architectural assistant போன்ற பொறுப்புகளில் பணிபுரிய ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். தகுதி: UG degree விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள்: ஜூலை 2-2023

தனது மனைவிக்கு காதலனோடு திருமணம் செய்து வைத்த கணவன் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்‌ மிர்சாப்பூரில்‌, கணவர்‌ ஒருவர்‌ தனது மனைவிக்கு அவரது காதலனையே திருமணம்‌ செய்து வைத்த சம்பவம்‌ நிகழ்ந்துள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்‌ என்பவர் கடந்த ஆண்டு ரோஸ்‌ என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால்‌ மனைவி ரோஸ்‌ தனது அண்டை வீட்டை சேர்ந்த ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார்‌. […]

பெண்களின் உடலுறவு ஒப்புதல் அளிக்கும் வயதை, 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து, அரசு சிந்திக்க வேண்டும் என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் 20 வயது இளைஞனுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, இது போன்ற வழக்குகளில் ஆண் பிள்ளைகள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, வயது காரணமாக ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர் என நீதிபதிகள் கூறினர். […]

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தின்படி தனிநபரோ அல்லது கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுத்தேர்தலில் அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் பெற்ற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தகுதி பெற்றவையாகும். இவ்வாறு பெற்ற தேர்தல் பத்திரங்களை தகுதியுள்ள அரசியல் கட்சி அதிகாரமளிக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே பணமாக்க முடியும். […]

7 வயது சிறுமியை பள்ளி கழிவறையில் வைத்து 12 வயது சிறுவன் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே மாவல் என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஜூன் 26ஆம் தேதி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்றைய தினம் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த 7 வயது சிறுமியை அங்கு படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் […]

ஹெச்டிஎப்சி வங்கி உடன் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்டிஎப்சி பல மாத முயற்சிக்கு பின்பு ஜூலை 1 ஆம் தேதி இணைக்கப்பட உள்ளது. இந்த இணைப்பின் மூலம் உலகின் பல வங்கிகளை பின்னுக்கு தள்ளி ஹெச்டிஎப்சி வங்கி உலகின் 4வது பெரிய வங்கி அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் வீட்டுக்கடன் சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்டிஎப்சியின் சேர்மன் ஆக இருக்கும் தீபக் பரேக், இந்நிறுவனத்தின் கடைசி […]