மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் தலைநகரில் இப்போதே சூடுபிடித்துள்ளன. வருமான வரிச் சலுகைகள், ஜிஎஸ்டி மாற்றங்கள் எனப் பல்வேறு எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் பார்வை முழுவதும் ‘பிஎம் கிசான்’ (PM-Kisan) திட்டத்தின் மீதே உள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு ஊக்கத்தொகையை மத்திய அரசு இந்த முறை உயர்த்துமா […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், காதலரை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு அவரது குடும்பத்தினரே உருவ பொம்மை வைத்து இறுதிச் சடங்கு நடத்திய வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. விதிஷா பகுதியைச் சேர்ந்த 23 வயதான கவிதா என்ற இளம்பெண், சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில், கவிதா தனது காதலனுடன் வீட்டை விட்டு […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவனைத் துண்டு துண்டாக வெட்டி, கிரைண்டரில் அரைத்து வீசிய மனைவியின் கொடூரச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பல் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட மனித உடல் பாகங்கள், ஒரு திட்டமிடப்பட்ட கொலையின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. சம்பல் மற்றும் சந்தௌசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிதறிக்கிடந்த உடல் பாகங்களை மீட்ட காவல்துறையினர், அவற்றை அடையாளம் காண்பதில் பெரும் சவாலை எதிர்கொண்டனர். இறுதியில், […]
A recent ‘Great Place To Work India’ survey has revealed that by 2026, six out of ten employees will be looking for new jobs.
3 மாநிலங்களில் கொள்ளையடிப்பதற்காக வீடுகளை அடையாளம் காண கூகுள் மேப்பை பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட திருட்டுக் கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது. ஸ்டீல் சிட்டியில் சமீபத்தில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் குறித்த விரிவான விசாரணைக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கும்பல் தங்கள் இலக்குகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தது? கிழக்கு சிங்பூம் மாவட்ட எஸ்எஸ்பி பியூஷ் பாண்டே பேசிய போது, அந்தக் கும்பல் கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி […]
டெல்லி அரசு அடுத்த நிதியாண்டிலிருந்து ஒரு புதிய மின்சார வாகனக் கொள்கையை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. இந்தக் கொள்கையின் நோக்கம், மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மாசுபாட்டினால் ஏற்படும் காற்று மாசைக் குறைப்பதும் ஆகும். முதலமைச்சர் ரேகா குப்தா இந்தக் புதிய கொள்கை குறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டார்.. டெல்லி மின்சார வாகனக் கொள்கை 2.0 மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான மானியங்கள், […]
டெல்லி–மீரட் RRTS ரயிலில் ஒரு ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ நவம்பர் 24 அன்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஓடிக் கொண்டிருந்த ரயிலுக்குள் அநாகரகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த ஜோடி முதலில் முத்தமிடுவதும் பின்னர் ஒரு சீட்டால் தங்களை மூடிக்கொள்வது உடலுறவில் ஈடுபட்டதையும் பார்க்க முடிகிறது.. இது […]
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) தற்போது அதிரடி விளக்கமளித்துள்ளது. முட்டைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், ஆதாரமற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வதந்தியின் பின்னணி என்ன..? சமீபத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் காரணியான ‘நைட்ரோபியூரான்’ (Nitrofuran) என்ற […]
தங்கத்தின் விலை உயர்வு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே எட்டாக்கனியாக மாறி வரும் நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு புத்தாண்டிலும் இந்த விலையேற்ற புயல் ஓயாது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில், நடுத்தரக் குடும்பங்கள் நகை வாங்க முடியாமல் திணறி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரங்கள் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை என்றே தோன்றுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 10 கிராம் […]
வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதன் உச்சகட்டமாக, லக்ஷ்மிபூர் பகுதியில் வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) உள்ளூர் நிர்வாகி ஒருவரின் வீடு நள்ளிரவில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான தாக்குதலில் 7 வயது சிறுமி ஒருவர் உடல் கருகி பலியான நிலையில், […]

